Monday, 19 January 2026

கடந்து வந்த பாதை - யாழிசைசெல்வா

கடந்து வந்த பாதை

====================

எனக்கென மட்டும் 

உருவான ஒற்றைக் கனவிருந்தது -

ஒரு காலத்தில்!//


அதன் நிறத்தை

அதன் குணத்தை முழுவதும்

என்றாவது படித்திட வேண்டுமென்ற ஆவல் மட்டும் 

பசியோடு எழுந்த ஒரு பறவையின் தேடலை

ஒத்திருந்தது எனச் சொல்லலாம்...!//


ஆனால் வாய்த்ததெல்லாம் 

புறக்கணிப்பெனும்  பரிசு மட்டுமே....!//


புகழுக்காக போர்த்திக்கொள்ளவோ 

இரவிற்காக அணைத்துக்கொள்ளவோ

ஒருநாளும்  நான் முயன்று பார்த்ததில்லை!//


வழமையாய் கிடைத்ததெல்லாம்

உருப்படாத உபதேசம்

ஒன்றுக்கும் பயன்தராத நலவிசாரிப்புகளெனும்

நாடகம் மட்டுமே!//


இத்தனைக்கும் நடுவில்

எதிர்பாராமல் நீ இதயம் நுழைந்ததும்

கடந்த பாதையின் வலிகள் மொத்தமும்

தானே விடைபெறும் மாயம் நடக்கின்றது!//


பாதை ஒன்றுதான் 

அதன்பயணம்தான் வேறு 

புயலுக்கு பதில் 

வானவில்லோடு வலசை போகின்றது!//


யாழிசைசெல்வா

தேனி மாவட்டம் 

19/01/2026