Wednesday, 22 July 2026

கொஞ்ச(ம்) வேண்டும்?! 01

இருளின் மொத்தப் பரப்பையும் புறந்தள்ளி "மிணுக்... மிணுக்"கென ஒளியைச் சிந்திச் சிரித்துக் கொண்டிருந்தது, தூர கிழக்கில் தோன்றித் தெரியும் விடிவெள்ளி! அது புலரப்போகும் விடிபொழுதிற்கும் கழிந்து கொண்டிருக்கும் இரவிற்கும் இடையில் ஒரு பாலமாக இருந்தது. காலங் காலமாக மனிதன் தனக்குத்தானே கணக்கிட்டு கடந்து வந்த காலத்தின் மணிக்கணக்குகளில் ஒன்றுதான் அந்த விடிவெள்ளி! 


அப்படியான வாழ்வின் கணக்கிலிருந்து வழி தவறிப் போய் மீண்டும் பாதை தேடி வந்தடையும் ஒரு வேகத்தில் தான் ஆனந்திக்கு அன்றைய பொழுது புது விடியலைத் தந்திருந்தது.


அன்றைய இரவு முழுவதும் ஆனந்திக்கு ஒரு பொட்டு உறக்கம்கூட வரவில்லை. தன் வாழ்வில் இதுவரை நடந்ததை மறப்பதா? இனி நடக்கப் போவதை ரசிப்பதா? எனப் புரியாத பேதலிப்பில் இருந்தாள் அவள்.

அவள் பிறந்தது முதலே, அவள் கண்டதெல்லாம் கரடு தட்டிப்போன மண்ணோடும் காலம் அறியாத மழையோடும் பொழுதெல்லாம் புரண்டு நிமிர்ந்த மனிதர்களை மட்டுமே அவள் அறிவாள். அவள் வாழ்வு மொத்தத்தில் அறிந்தது, தெரிந்தது என அனைத்தும் இந்த ஊரின் எல்லைக்குள் மட்டுமே அடங்கியிருந்தது.


நேற்று சாவடியில் நடந்ததை நினைக்கும் போது அவளுக்கு நெஞ்சில் திக்கென்று இருந்தது. அப்படி எளிதாய் நடக்கும் என கனவிலும் அவள் நினைத்துப் பார்த்ததில்லை. "வலியும் வேதனையும் தனக்கு வரும் போது தான் உணர முடியும் என்பது எத்தனை உண்மை?" என  ஆனந்தி தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் வீட்டின் வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். 


அப்போது திடீரென வானத்தில் இடி இடித்து மழை கொட்டத் தொடங்கியிருந்தது. மழைத்தண்ணி வாசல் தாண்டி அவள்  வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தது கூடத் தெரியாபடி பழைய நெனப்பில் மிதந்து கொண்டிருந்தாள் ஆனந்தி. அவள் காலை நனைத்துக் கொண்டிருந்த மழைத்தண்ணியால் சுரணை வந்ததும் குடுகுடுவென குழந்தைபோல் ஓடிப்போய் வாசல் கதவை அடைத்து நாதாங்கி போட்டாள். அடுப்பங்கரைக்கு ஓடிச்சென்று அங்கிருந்த பித்தளை பாத்திரங்களை எடுத்து வந்து கூரையில் இருந்து ஒழுகும் நீருக்கு நேராக பாத்திரங்களை வைத்தாள். கூரையின் ஓட்டை வழியாக வந்து கொண்டிருந்த மழைத்தண்ணீர் சொட்டு சொட்டாக பாத்திரத்தில் விழுந்து அந்த இருளை கிழித்துக்கொண்டிருந்தது. ஆனால் அந்த மழை ஆனந்தியை மீண்டும் பழைய நினைவுக்குள் பிடித்து தள்ளியிருந்தது.


எல்லாம் சுகமாய் நடக்கும் என எல்லோரையும் போல் நம்பித்தான் ஆனந்தியின்  அம்மா வேலாயி தன் உறவுக்காரப் பையன்  காளியப்பனை தன் மகளுக்கு கல்யாணம் செய்து வைத்திருந்தாள். ஆனால் நடந்தது என்னவோ வேறு. கண்டதே காட்சி கொண்டதே கோலமென வாழ்ந்து கொண்டிருந்தான் காளியப்பன். உருப்படியாகச் சொல்லிக் கொள்ளும்படி எந்த வேலையும் இல்லாமல் ஊதாரி உதவாக்கரையாக  இருந்ததோடு மைனர் மிதப்பில் சுற்றி வந்து கொண்டிருந்தான் காளியப்பன். வளர்பிறையும் தேய்பிறையும் மாதங்களில் மாறி மாறி வந்து போனதே தவிர ஆனந்தியின் வாழ்க்கையில் வேறு மாற்றம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மகளின் துயரை எண்ணி எண்ணி உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்தாள் வேலாயி. அப்படியான நாட்களில் ஒருநாள். பக்கத்து ஊர் திருவிழாவில் கூட்டாளிகளோடு குடித்துக் கும்மாளம் போட்ட காளியப்பன், கள்ளச்சாராயம் குடித்ததில் செத்துப் போனான். செய்தி அறிந்ததும் ஆனந்தி திக்கு திசை தெரியாமல் திணறி போய் நின்று விட்டாள். வேலாயிதான் ஒரு வழியாக காளியப்பனின் இறுதிச் சடங்கை செய்து முடித்திருந்தாள். ஏற்கனவே அணு அணுவாய் சிதைந்து கொண்டிருந்த வேலாயி அன்றுமுதல் முழுவதுமாய் வீட்டின் மூலையில் முடங்கிப் போனாள். நாட்கள் மாதங்கள் என கால வெள்ளம் உருண்டோடியதில் நான்கு ஆண்டுகள் கடந்திருந்தது.


அன்றொரு நாள்.... 


சோளக் கதிர் அறுக்கும் வேலைக்கு போயிட்டு வந்திருந்த ஆனந்தி கை கால் கழுவி விட்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்து சமையல் வேலையை தொடங்கியிருந்தாள். வீட்டுத் திண்ணையில் முடங்கிப் படுத்து கிடந்த வேலாயி அடுப்பங்கரைக்குள் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டு முழித்து எழுந்தாள். "இப்பத்தேன்... வந்தயா தாயி...?"என தன் மகள் ஆனந்தியை பார்த்துக் கேட்டாள் வேலாயி. அண்டாவிலிருந்த அரிசியிலிருந்து காப்பி அரிசி எடுத்து சின்ன குண்டாவில் போட்டாள். பானையிலிருந்து பித்தளை சொம்பு நிறைய தண்ணீர் மோந்தெடுத்து வைத்திருந்த இருந்த அரிசியில் தண்ணீர் ஊற்றி அலசிக்கொண்டே "ஆமா..." எனக் கூறியவள் கடையடைப்பு பக்கமாக விறகைத் தள்ளியதும் நெருப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. "கருவாட்டு குழம்பு வைக்கட்டுமா..?" என்றவள் வேலாயின் முகத்தை பார்த்தாள். சரி என்பது போல் வேலாயி தலையாட்டினாள். அடுப்பங்கரையின் மூலையிலிருந்த தகர டப்பாவில் இருந்து ஒரு கை நிறைய குச்சிக் கருவாடு அள்ளி எடுத்து கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊர வைத்தாள் ஆனந்தி. 


தன் மகள் செய்யும் வேலையை பார்த்துக் கொண்டிருந்த வேலாயி அவள் அருகில் போய் நின்றவள் "தாயி.." என கூப்பிட்டாள்.


"சொல்லுமா கேக்குது.."


"நான் ஒன்னு சொல்லுவேன்... நீ கோவப்படாம கேட்கணும்..."என்ற வேலாயி உள்ளுக்குள் தான் எடுத்த ஏதோ ஒரு தீர்மானத்தை எப்படியாவது இன்று மகளிடம் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பு ஓடிக் கொண்டு இருந்தது. அதை எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் தவித்து வந்தவள் அடுப்பங்கரைக்குள் தத்தி தத்தி அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள்.


"இன்னைக்கு நீ ஏதோ முடிவோட பேசுற மாதிரி தெரியுது... என்ன விஷயம்? முதல்ல நீ சொல்லு... மத்தத அப்புறம் பார்ப்போம்.. நீ எதுக்கு இப்ப வீட்டை அளக்கிர மாதிரி நடந்துகிட்டு இருக்க... சட்டுபுட்டுனு சொல்லவந்த விஷயத்தை சொல்லு...."


"பாத்தியா... நான் இன்னும் சொல்லவே ஆரம்பிக்கல... அதுக்குள்ள வேண்டா வெறுப்பா பேசி என்ன விரட்டுற"


"ஏம்மா நீ வேற... ஏற்கனவே காட்டுல் வேலை செஞ்சதுல உடம்பெல்லாம் வலி தாங்க முடியல... நீ என்னடானா .... எதுவுமே சொல்லாம... என்ன போட்டு படுத்தி எடுக்கிற.."


"அது இல்லப்பா... உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்... அதை எப்படி சொல்றதுனு தெரியாம தவிச்சுக்கிட்டு நிக்கிறேன்..."


"ஒன்னு பண்ணு... நீ என்ன நினைக்கிறாயோ அத மறைக்காம சொல்லு... அதுக்குப் பெறகு அது வேணுமா வேணாமா... அப்படிங்கற மத்த விஷயத்தை எல்லாம் பெறகு பாத்துக்கலாம்..." எனச் சொல்லிக் கொண்டே வேலாயியின் கையைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்து தானும் அவளருகில் அமர்ந்து கொண்டாள். 


கொஞ்ச நேரம் தன் மகள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த வேலாயி "இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருப்பேன்னு தெரியாது... "என்ற வேலாயின் வாயை தன் கையால் பொத்தினாள் ஆனந்தி. சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசாமல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தார்கள். என்ன நினைத்தார்களோ தெரியவில்லை இருவர் கண்களும் குற்றமாகக் தேங்கி வழிந்தது.


அப்போது அடுப்பில் வைத்திருந்த உலை கொதிக்கத் தொடங்கியதும் உலைப் பானையை  மூடியிருந்த தட்டை கீழே தள்ளி இருந்தது. குண்டாவில் இருந்த அரிசியைக் கலைந்து எடுத்து உலையிப் பானையில் போட்டாள். அதன்பின் அதில் தேவையான உப்பைப் போட்டு கரண்டியால் கிண்டிவிட்டாள். கிண்ணத்தில் ஊற வத்திருந்த குச்சிக்கருவாடை அள்ளி எடுத்தவள் கடை அடைப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாத்திரத்தில் போட்டு வேக வைக்கத் தொடங்கினாள்.


மீண்டும் வேலாயி தன் மகளைப் பார்த்து "தாயி!"என்றாள்.


"சொல்லுமா.."என்றாள் ஆனந்தி.


"சாயங்காலம் குருசாமி அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தாரு..."


"நீ யார சொல்ற..? நம்ம ஊரு குடும்பர் குருசாமி மாமாவையா சொல்ற?"


"ஆமாம் தாயி... உம் மேலேயும் எம்மா மேலயும் இந்த ஊர்ல அக்கறையோடு இருக்கிறது அவர விட்டா வேர  யாரு இருக்கா சொல்லு...? ஒரு கொடி வழியில் நாங்க எல்லாம் பிறந்தோம்னு  சொல்லிக்கிறதுக்கு இந்த உலகத்துல எனக்கு மிச்சமா இருக்கிறது அவர் மட்டும்தான். அதனாலதான் நமக்கு ஒத்தாசையா இருக்காரு...'


"இத நீ சொல்லித்தேன் எனக்கு தெரியணுமா என்ன?"நீ சொல்ல வந்தத முதல்ல சொல்லு?"


"மறுபடியும் சொல்றேன்... நீ கோவப்படாம கேளு... அப்பத்தேன் நான் சொல்லுவேன்..." என ஒரு சூட்சமத்தோடு தன் மகளைப் பார்த்துச் சொன்னாள் வேலாயி. 


"இன்னைக்கு நீ என்னவோ வித்தியாசமா பேசுற... எதுவா இருந்தாலும் தயங்காமச் சொல்லு... எதுவானாலும் பாத்துக்கலாம்..."


"இன்னும் எத்தனை நாளைக்கு... இப்படி வயசுப் புள்ளைய வீட்டிலேயே வச்சிருக்கப் போற...? உனக்கும் சரி எனக்கும் சரி வயசாகிக்கிட்டே போகுது... காலா காலத்தில புள்ளைய ஒரு நல்ல இடத்துல கட்டி குடுத்துட்டா... போற நம்ம உசுரும்  நிம்மதியா போகும்...  இந்த நினைப்புதான் என்னைய ரொம்ப நாளா அரிச்சுக்கிட்டு இருந்துச்சு. அதுக்கு ஒரு தீர்வு கிடைச்சிருக்கு, ஒரு நல்ல பையன் இருக்கான். நீ சம்மதிச்சா அந்தப் பயலையே பேசி ஆனந்திக்கு கல்யாணம் கட்டி வைக்கலாம். அதுதேன் உன்கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.."அப்படின்னு சொன்னாரு குருசாமி அண்ணே..."


"இப்ப என்ன...? அண்ணனும் தங்கச்சியுமாச் சேர்ந்து மறுபடியும் என்னைய ஒரு குடிகாரப் பயலுகிட்ட தள்ளிவிட பாக்குறீங்களா...? ஏற்கனவே நான் பட்ட ரணம் நெஞ்சுக்குள்ள கிடந்து அறுத்துக்கிட்டு இருக்கு. இப்ப ஏம்மா... புதுசா ஒன்னக் கொண்டு வந்து மேலும் என்ன கஷ்டப்படுத்திப் பாக்க நினைக்கிற...?"


"

அடுக்களை தாண்டி இருந்த படுக்கை அறையில் வைத்திருந்த முக்காலியின் மேல் இரவு ஏற்றி வைத்திருந்த மண்ணெண்ணெய் விளக்கு சன்னமாய் பரப்பிய ஒளியில் விரித்துப் போட்டிருந்த கோரப்பாய் கொஞ்சமும் கலையாமல் அப்படியே இருந்ததை காட்டியது. ஆனந்தி ஒரு கணம் அதை பா

ர்த்துவிட்டு மீண்டும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். 


கொஞ்ச(ம்) வேண்டும்!? - 01 (யாழிசைசெல்வா)

இருளின் மொத்தப் பரப்பையும் புறந்தள்ளி "மிணுக்... மிணுக்"கென ஒளியைச் சிந்திச் சிரித்துக் கொண்டிருந்தது, தூர கிழக்கில் தோன்றித் தெரியும் விடிவெள்ளி! அது புலரப்போகும் விடிபொழுதிற்கும் கழிந்து கொண்டிருக்கும் இரவிற்கும் இடையில் ஒரு பாலமாக இருந்தது. காலங் காலமாக மனிதன் தனக்குத்தானே கணக்கிட்டு கடந்து வந்த காலத்தின் மணிக்கணக்குகளில் ஒன்றுதான் அந்த விடிவெள்ளி! 

அப்படியான வாழ்வின் கணக்கிலிருந்து வழி தவறிப் போய் மீண்டும் பாதை தேடி வந்தடையும் ஒரு வேகத்தில் தான் ஆனந்திக்கு அன்றைய பொழுது விடியக் காத்திருந்தது.

அன்றைய இரவு முழுவதும் ஆனந்திக்கு ஒரு பொட்டு உறக்கம்கூட வரவில்லை. தன் வாழ்வில் இதுவரை நடந்ததை மறப்பதா? இனி நடக்கப் போவதை ரசிப்பதா? எனப் புரியாத பேதலிப்பில் இருந்தாள் அவள்.

அவள் பிறந்தது முதலே, அவள் கண்டதெல்லாம் கரடு தட்டிப்போன மண்ணோடும் காலம் அறியாத மழையோடும் பொழுதெல்லாம் புரண்டு நிமிர்ந்த மனிதர்களை மட்டுமே அவள் அறிவாள். அவள் வாழ்வு மொத்தத்தில் அறிந்தது, தெரிந்தது என அனைத்தும் இந்த ஊரின் எல்லைக்குள் மட்டுமே அடங்கியிருந்தது.

நேற்று சாவடியில் நடந்ததை நினைக்கும் போது அவளுக்கு நெஞ்சில் திக்கென்று இருந்தது. அப்படி எளிதாய் நடக்கும் என கனவிலும் நினைத்தும் பார்த்ததில்லை. "வலியும் வேதனையும் தனக்கு வரும் போது தான் உணர முடியும் என்பது எத்தனை உண்மை?" என  ஆனந்தி தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் வீட்டின் வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

அப்போது திடீரென வானத்தில் இடி இடித்து மழை கொட்டத் தொடங்கி இருந்தது. மழைத்தண்ணி வாசல் தாண்டி அவள்  வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தது கூடத் தெரியாமல். பழைய நெனைப்பில் இருந்தாள் ஆனந்தி. அவள் காலை நனைத்துக் கொண்டிருந்த மழைத்தண்ணியால் சுரணை வந்ததும் குடுகுடுவென ஓடிப்போய் வாசல் கதவை அடைத்து விட்டு அடுக்கலைக்கு ஓடிச்சென்று அங்கிருந்த பித்தளை பாத்திரங்களை எடுத்து வந்து கூரையில் இருந்து ஒழுகும் நீருக்கு நேராக பாத்திரங்களை வைத்தாள். கூரையின் ஓட்டை வழியாக மழைத்தண்ணீர் சொட்டு சொட்டாக பாத்திரத்தில் விழுந்து அந்த இருளை கிழித்துக்கொண்டிருந்தது. ஆனால் அந்த மழை ஆனந்தியை மீண்டும் பழைய நினைவுக்குள் பிடித்து தள்ளியிருந்தது.

எல்லாம் சுகமாய் நடக்கும் என எல்லோரும் போல் நம்பித்தான் ஆனந்தியின்  அம்மா வேலாயி தன் உறவுக்காரப் பையன்  காளியப்பனை தன் மகளுக்கு கல்யாணம் செய்து வைத்திருந்தாள். ஆனால் நடந்தது என்னவோ வேறு. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழ்ந்து கொண்டிருந்தான் காளியப்பன். உருப்படியாகச் சொல்லிக் கொள்ளும்படி எந்த வேலையும் இல்லாமல் ஊதாரி உதவாக்கரையாக  இருந்ததோடு மைனர் மிதப்பில் சுற்றி வந்து கொண்டிருந்தான் காளியப்பன். வளர்பிறையும் தேய்பிறையும் மாதங்களில் மாறி மாறி வந்து போனதே தவிர ஆனந்தியின் வாழ்க்கையில் வேறு மாற்றம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மகளின் துயரை எண்ணி எண்ணி மருகிக் கொண்டிருந்தாள் வேலாயி. அப்படியான நாளில் ஒருநாள். பக்கத்து ஊர் திருவிழாவில் கூட்டாளிகளோடு கும்மாளம் போட்ட காளியப்பன் கள்ளச்சாராயம் குடித்ததில் செத்துப் போனான். 

அடுக்களை தாண்டி இருந்த படுக்கை அறையில் வைத்திருந்த முக்காலியின் மேல் இரவு ஏற்றி வைத்திருந்த மண்ணெண்ணெய் விளக்கு சன்னமாய் பரப்பிய ஒளியில் விரித்துப் போட்டிருந்த கோரப்பாய் கொஞ்சமும் கலையாமல் அப்படியே இருந்ததை காட்டியது. ஆனந்தி ஒரு கணம் அதை பார்த்துவிட்டு மீண்டும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். 



Thursday, 18 June 2026

மனம் என்னும் பறவை

மனம் என்னும் பறவை!

========================

பெருகிக்கொண்ட சுமைகளை தூக்கியபடி

வெகுதூரம் கடந்தபிறகு

கால்களை பிணைக்கும்

தழைகளின் வலி இப்போது தளர்ந்துவிட்டது!


கெடுமதியாய் பிடித்து

வரம்பற்ற மோகத்தில் ஆழ்த்திடும் வழிப்பயணத்தை

தொலைத்த நிம்மதியில்

என் இரைப்பை முழுவதும் நிறைந்து வழிகிறது

இப்போது ஈரத்தின் வாசம்!


கதியாய் எழுந்த காற்றோட்டம் போல்

சுகமாய் நிமிர்ந்த 

வெண் மேகத்தின் ஒளிபோல்

சுடர்ந்து எரியும் அகல்விளக்காய் 

விடிவானம் தெரிகையில்

தொலை தூரம் முழுமையும்

விடியலின் கீற்றுகள் விண்ணப்பம் போடுகிறது 

என் விடியலுக்காக...!!


அதனால்...

கடக்க முடியாத கனவுகள் 

உலவிடும் காற்றாகி 

பிடித்தங்களை பிடித்தபடி

அலாதியாய் நடக்கையில்

வீம்புக்கு முளைத்திடும் வினாக்களின் கூர்மையை

இடம் நகர்த்தும் துணிவுவோடு எழுகிறது

என் மனம் என்னும் பறவை!


யாழிசைசெல்வா

19/06/2026






Wednesday, 17 June 2026

TAPS விதிமுறைகள்

 Government Order (G.O.Ms.No.111, dt 16.06.2026) இன் முக்கியப் பகுதிகள் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:


​தலைப்பு: ஓய்வூதியம் – தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) – விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல் – TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் 01.01.2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கான வாழ்வாதார ஆதரவு – இடைக்கால ஊதியம் (Interim Payout) வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.  


​முக்கிய உத்தரவுகள் மற்றும் நடைமுறைகள் (G.O. சுருக்கம்):


​1. நோக்கம் மற்றும் பின்னணி:


​01.01.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 'தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  


​இந்தத் திட்டத்திற்கான விரிவான விதிகள் மற்றும் நடைமுறைகள் இறுதி செய்யப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்தில், ஓய்வுபெறும் ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக தற்காலிக நடவடிக்கையாக இந்த மாதாந்திர இடைக்கால ஊதியம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  


​2. தகுதி வரம்புகள் (யார் யாருக்குப் பொருந்தும்?):


​01.04.2003 அன்று அல்லது அதற்குப் பிறகு வழக்கமான ஊதிய விகிதத்தில் (Regular scale of pay) பணியில் சேர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் இருந்த அரசு ஊழியர்களுக்கு இது பொருந்தும்.  


​01.01.2026 அன்று பணியில் இருந்து, அதற்குப் பிறகு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதியான பணிக்காலத்தை முடித்து வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றவர்கள் (Superannuation) அல்லது பணியின் போது இயற்கை எய்தியவர்களின் (Death-in-harness) குடும்பத்தினருக்கு இது பொருந்தும்.  


​3. யாருக்குப் பொருந்தாது?


​வயது முதிர்வு ஓய்வு அல்லது பணியின் போது மரணம் தவிர்ந்த இதர வழிகளில் பணியிலிருந்து விலகியவர்கள்.  


​தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் விதி 17(பி)-இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில் ஓய்வு பெற்றவர்கள்.  


​01.01.2026-க்கு முன்னதாகவே அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்.  


​4. இடைக்கால ஊதியம் கணக்கிடும் முறை:


​ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு:


கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் (Basic Pay) 30% அல்லது ₹10,000 (எது அதிகமோ அது) மற்றும் அதனுடன் 60% அகவிலை நிவாரணம் (Dearness Relief) சேர்த்து மாதாந்திர இடைக்கால ஊதியமாக வழங்கப்படும்.  


​பணியின் போது மரணமடைந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு:


மேற்கண்ட கணக்கீட்டின்படி (அடிப்படை ஊதியத்தில் 30% அல்லது ₹10,000, எது அதிகமோ அது + 60% அகவிலை நிவாரணம்) மாதாந்திர இடைக்கால குடும்ப ஊதியமாக வழங்கப்படும்.  


​ஓய்வூதியதாரர் இறந்தால்:


இடைக்கால ஊதியம் பெற்று வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இறந்தால், அவரது தகுதியுள்ள குடும்ப உறுப்பினருக்கு அவர் பெற்று வந்த இடைக்கால ஊதியத்தில் 60% தொகையானது இடைக்கால குடும்ப ஊதியமாக வழங்கப்படும்.  


​5. வெளியேறும் விருப்பத்தேர்வுகள் (Exit Options):


​அரசு ஊழியர்கள் TAPS திட்டத்திலிருந்து வெளியேற விரும்பினால் இரண்டு கட்ட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன:


​முதல் கட்டம் (உடனடி விலகல் - Stage-I): Comprehensive TAPS விதிகளுக்காகக் காத்திருக்காமல் உடனடியாக திட்டத்திலிருந்து விலக விரும்பினால், படிவம்-III / IV (Form-III/IV) மூலம் CPS இறுதித் தீர்வுப் பிரகடனத்தை சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் அவர்களின் CPS கணக்கில் உள்ள தொகை (ஊழியர் + அரசின் பங்களிப்பு மற்றும் வட்டி) தற்போதைய CPS வழிகாட்டுதலின்படி முழுமையாகத் தீர்வு செய்யப்படும். இந்த முடிவு இறுதியானது மற்றும் மாற்ற முடியாதது; இதன் பிறகு TAPS திட்டத்தின் எந்தப் பலன்களையும் கோர முடியாது.  


​இரண்டாம் கட்டம் (விதிகள் அறிவிக்கப்பட்ட பின் விலகல் - Stage-II): தற்போது இடைக்கால ஊதியப் பலன்களைப் பெறத் தொடங்குபவர்கள், எதிர்காலத்தில் முறையான TAPS விதிகள் அறிவிக்கப்பட்டவுடன், இத்திட்டத்திலேயே நிரந்தரமாக நீடிக்கலாமா அல்லது இதுவரை பெற்ற இடைக்கால ஊதியத் தொகையை (வட்டியுடன் சேர்த்து) கழித்துக் கொண்டு மீதமுள்ள முழு CPS தொகையையும் பெற்றுக்கொண்டு வெளியேறலாமா என்பதை முடிவு செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.  


​6. காலக்கெடு மற்றும் விண்ணப்பிக்கும் முறை:


​ஏற்கனவே (01.01.2026 முதல் இந்த அரசாணை வெளியான தேதிக்குள்) ஓய்வு பெற்றவர்கள் அல்லது மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர், இந்த அரசாணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் குறிப்பிட்ட படிவத்தில் (Form-I / II) தங்கள் விருப்பப் பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  


​இனிமேல் ஓய்வு பெறுபவர்கள் அல்லது மரணமடைபவர்களின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற/மரணமடைந்த தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  


​இந்த இடைக்கால ஊதியம் தற்காலிகமானது மற்றும் முறையான TAPS விதிகள் அறிவிக்கப்பட்டவுடன், இறுதிப் பலன்கள் கணக்கிடப்பட்டு, இந்த இடைக்காலத் தொகையோடு சரிசெய்யப்படும் (Arrears or Recovery).






*தமிழாக்கம் - G.O.(Ms) No.111, நிதி (TAPS) துறை, நாள்: 16.06.2026*




*சுருக்கம்*  


ஓய்வூதியம் – தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) – விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல் – 01.01.2026 முதல் ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரையிலான இடைக்கால காலத்திற்கு வாழ்வாதார ஆதரவு – இடைக்கால தொகை வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.




அரசாணை (நிலை) எண்.111 , நாள்: 16.06.2026  


*ஆண்டு:* 2  


*திருவள்ளுவர் ஆண்டு:* 2057.




*பார்வை:* அரசாணை (நிலை) எண்.7, நிதி (PGC) துறை, நாள்: 09.01.2026.




*ஆணை:*  


1. மேற்கண்ட அரசாணையில், தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதிய பலன்களை வழங்கும் நோக்கத்துடன் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)’ என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. TAPS-க்கான விரிவான விதிகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்படுத்தும் நடைமுறை தனியாக அறிவிக்கப்படும் எனவும், TAPS 01.01.2026 முதல் அமலுக்கு வரும் எனவும், விதிகள் அறிவிக்கப்பட்டு தேவையான சட்ட மற்றும் கணக்கியல் தேவைகள் நிறைவடைந்த பின்னரே செயல்படுத்தப்படும் எனவும் ஆணையிடப்பட்டது.




2. TAPS-க்கான விதிகளை உருவாக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. இது இடை-அலுவலக ஆலோசனை செயல்முறையை வரையறுக்கும். குறிப்பிட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்படுத்தும் நடைமுறைகளை இறுதி செய்ய பல்வேறு பங்குதாரர்களுடன் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில், TAPS விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரை, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வாழ்வாதார ஆதரவை வழங்க, 01.01.2026 முதல் பணியிலிருந்து விலகிய பிறகு தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு கீழே பத்தி 4-ல் உள்ளபடி மாதாந்திர இடைக்காலத் தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.




3. TAPS விதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரும், கடைசியாக பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 50% மற்றும் தகுதியான பணிக்காலத்திற்கு ஏற்ப அகவிலைப்படி ஆகியவற்றை உள்ளடக்கிய உறுதியளிக்கப்பட்ட மாதாந்திர தொகையை நிர்ணயிக்கும் செயல்முறை மற்றும் வழக்கமான ஓய்வூதிய அங்கீகார ஆணைகளை வழங்க சிறிது காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அரசு கவனமாக பரிசீலித்த பின், இந்த அரசாணையின் பத்தி 6-ல் கூறப்பட்டுள்ள தற்காலிக நடைமுறைப்படி இடைக்கால மாதாந்திர தொகையை வழங்க ஆணையிடுகிறது. இது TAPS விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரையிலான காலத்திற்கு மட்டுமே.




*4. இந்த ஆணை யாருக்கு பொருந்தும்:*  


01.04.2003 அன்றோ அதற்குப் பின்னரோ முறையான ஊதிய விகிதத்தில் பணியமர்த்தப்பட்டு, மாநில அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் பணியில் சேர்ந்து, 01.01.2026 அன்று பணியில் இருந்து, 01.01.2026 அன்றோ அதற்குப் பின்னரோ TAPS விதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்போ, 10 ஆண்டுகளுக்குக் குறையாமல் பணிபுரிந்து வயது முதிர்வு அல்லது பணிக்காலத்தில் மரணம் காரணமாக பணியிலிருந்து விலகும் அரசு ஊழியர்களுக்கு இந்த இடைக்கால நடைமுறைகள் பொருந்தும்.




*5. (அ) இந்த ஆணைகள் பொருந்தாது:*  


i. வயது முதிர்வு அல்லது பணிக்கால மரணம் தவிர பிற காரணங்களுக்காக அரசுப் பணியிலிருந்து விலகும் நிகழ்வுகளுக்கு.  


ii. தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் விதி 17(b)-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு.  


iii. 01.01.2026-க்கு முன் அரசுப் பணியில் இருந்து விலகிய எந்தவொரு அரசு ஊழியருக்கும்.  


(ஆ) மேற்கண்ட (i) மற்றும் (ii) பிரிவுகளுக்கு, இடைக்கால தொகை குறித்து தனி ஆணைகள் வெளியிடப்படும்.




*6. இடைக்கால மாதாந்திர தொகை கணக்கிடும் முறை:*  


i. 10 ஆண்டுகளுக்குக் குறையாமல் பணிபுரிந்து, 01.01.2026 அன்றோ அதற்குப் பின்னரோ வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் ஒவ்வொரு தகுதியுள்ள அரசு ஊழியரும், TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரை, பணியிலிருந்து விலகிய பின் வாழ்வாதாரத்திற்காக மாதாந்திர இடைக்கால தொகையைப் பெறத் தேர்வு செய்யலாம்.  


ii. TAPS செயல்படுத்தப்படும் வரை, முழு அல்லது விகிதாச்சார தகுதியுள்ள மாதாந்திர தொகையை நிர்ணயிப்பதற்கான தகுதியான பணிக்காலம் மற்றும் பிற தகுதி நிபந்தனைகளை சரிபார்ப்பதற்கு நிலுவையில் இருப்பதால், வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்ற பிறகு வழங்கப்படும் இடைக்கால தொகை, கடைசியாக பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30% அல்லது ரூ.10,000/- இவற்றில் எது அதிகமோ, அத்துடன் அதற்கான அகவிலைப்படியில் 50% சேர்த்து, ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.  


iii. மேலே (i)-ல் குறிப்பிட்டபடி இடைக்கால தொகையை தேர்வு செய்து, 01.01.2026 அன்றோ அதற்குப் பின்னரோ மரணமடையும் வயது முதிர்வு ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் தகுதியான குடும்ப உறுப்பினருக்கு, TAPS செயல்படுத்தப்பட்டு வழக்கமான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் வரை, அந்த ஓய்வூதியதாரருக்கு வழங்கப்பட்ட இடைக்கால மாதாந்திர தொகையில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.  


iv. 01.01.2026 அன்றோ அதற்குப் பின்னரோ பணியில் இருக்கும்போது மரணமடையும் அரசு ஊழியரின் தகுதியான குடும்ப உறுப்பினர், TAPS விதிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரை, அரசு ஊழியரின் மரணத்திற்குப் பிறகு வாழ்வாதாரத்திற்காக மாதாந்திர இடைக்கால குடும்ப தொகையைப் பெறத் தேர்வு செய்யலாம்.




*முக்கிய குறிப்பு:* இது TAPS விதிகள் முறையாக அறிவிக்கப்படும் வரை ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. 




இந்த அரசாணையின் பக்கம் 3 மற்றும் 4-ன் தமிழாக்கம் இதோ:




*பக்கம் -3-*




*v.* மேற்கண்ட துணைப்பத்தி (iv)-ன் படி இடைக்கால மாதாந்திர குடும்பத் தொகை பெற விரும்பும் நபர்களுக்கு, தகுதியான சேவை சரிபார்ப்பு மற்றும் இறந்த அரசு ஊழியரின் பிற தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்தல் நிலுவையில் இருக்கும்போது, கணக்கிடப்பட வேண்டிய முழு அல்லது விகிதாசார தகுதியான மாதாந்திர குடும்பத் தொகைக்கு, TAPS விதிகளின்படி, உரிய காலத்தில் அறிவிக்கப்படும். இடைக்கால நடவடிக்கையாக, ஜீவனாம்சத்திற்கான மாதாந்திர குடும்பத் தொகை, இறந்த அரசு ஊழியர் கடைசியாக பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் முப்பது சதவீதமாக (30%) அல்லது ரூ.10,000/- இதில் எது அதிகமோ, அதனுடன் 50% அகவிலைப்படி நிவாரணமும் சேர்த்து, இறுதி மாதாந்திர குடும்பத் தொகை நிர்ணயிக்கப்படும் வரை ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.




*vi.* துணைப்பத்தி-iv-ன் கீழ் இடைக்கால மாதாந்திரத் தொகை / குடும்பத் தொகை பெறுவதற்கான விருப்பத்தை, சம்பந்தப்பட்ட நபர்கள் இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள், படிவம்-III-ல் குறிப்பிடப்பட்டுள்ள வடிவத்தில் உறுதிமொழி அளித்து தெரிவிக்க வேண்டும். 01.01.2026 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பணியிலிருந்து வெளியேறிய நபர்களுக்கு இது பொருந்தும். இந்த அரசாணை வெளியிடப்பட்ட பிறகு ஓய்வு பெற்று அல்லது பணியில் இருக்கும்போது மரணமடைந்து சேவையிலிருந்து வெளியேறும் அரசு ஊழியர்களுக்கு, ஓய்வு/பணியில் இருக்கும்போது மரணம் அடைந்த நாளிலிருந்து 60 நாட்கள் கால அவகாசம், குறிப்பிட்ட படிவத்தில் விருப்பத்தை சமர்ப்பிக்க வழங்கப்படும்.




*vii.* இடைக்காலத் தொகை / குடும்பத் தொகை கணக்கீடு, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அல்லது மரணமடைந்த தேதிக்கு அடுத்த நாளிலிருந்து தொடங்கும். அதன்படி வழங்கப்படும். ஏதேனும் நிலுவைத் தொகை இருந்தால், அது தகுதியான நபர்களுக்கு வழங்கப்படும்.




*7.* TAPS கட்டமைப்பிலிருந்து வெளியேற விரும்பும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, பின்வரும் இரண்டு கட்ட வெளியேறும் விருப்பம் வழங்கப்பட வேண்டும் என அரசு மேலும் உத்தரவிடுகிறது:




*i. கட்டம்-I (உடனடி வெளியேறும் விருப்பம்):* 01.01.2026 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ [துணைப்பத்தி (ii) மற்றும் (iv)] ஓய்வு பெற்று சேவையிலிருந்து வெளியேறும் எந்தவொரு அரசு ஊழியரும் அல்லது பணியில் இருக்கும்போது மரணம் அடைந்தால் தகுதியான குடும்ப உறுப்பினரும், விரிவான TAPS விதிகளுக்காக காத்திருக்காமல், படிவம்-III/IV-ல் ஒரு முறையான CPS இறுதித் தீர்வு அறிவிப்பை செயல்படுத்துவதன் மூலம், உடனடியாக TAPS-ல் இருந்து வெளியேறும் விருப்பத்தை பயன்படுத்தலாம். அத்தகைய நபர்களுக்கு, ஊழியர் மற்றும் அரசாங்கத்தின் பங்களிப்புகள் மற்றும் ஓய்வு/பணியில் இருக்கும்போது மரணம் அடைந்த தேதியில் ஊழியரின் CPS கணக்கில் வரவு வைக்கப்பட்ட திரட்டப்பட்ட வட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய திரட்டப்பட்ட இருப்புத் தொகை, தற்போதுள்ள CPS வழிகாட்டுதல்களின்படி தீர்க்கப்படும்.




கட்டம்-I உடனடி வெளியேறும் விருப்பத்தைப் பயன்படுத்துவது இறுதியானது மற்றும் மாற்ற முடியாதது. அத்தகைய பயன்பாட்டின் பேரில், சம்பந்தப்பட்ட நபர் TAPS விதிகளின் கீழ் உத்தரவாதமான குடும்பத் தொகை / மாதாந்திரத் தொகைகளை கோருவதற்கான எந்தவொரு உரிமையையும் உரிமையையும் நிரந்தரமாக இழப்பார். அத்துடன் TAPS விதிகளின் கீழ் எதிர்காலத்தில் உறுதியளிக்கப்பட்ட எந்தவொரு நன்மையும் கிடைக்காது. மேலும் TAPS கட்டமைப்பிற்கு மீண்டும் தேர்வு செய்ய அனுமதிக்கப்படாது.




*ii. கட்டம்-II (அறிவிப்புக்குப் பிந்தைய மேலும் வெளியேறும் விருப்பம்):* 01.01.2026-க்குப் பிறகு [துணைப்பத்திகள் (ii), (iii) மற்றும் (iv)] ஓய்வு பெற்று அல்லது தகுதியான குடும்ப உறுப்பினர் பணியில் இருக்கும்போது மரணம் அடைந்தால் அல்லது ஓய்வுக்குப் பிந்தைய மரணம் அடைந்தால் சேவையிலிருந்து வெளியேறும் எந்தவொரு அரசு ஊழியரும், இந்த உத்தரவின்படி இடைக்காலத் தொகை நன்மைகளைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு, TAPS விதிகள் அறிவிக்கப்பட்டவுடன் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது, நிரந்தரமாக TAPS கட்டமைப்பிற்குள் இருப்பது அல்லது வெளியேறி, பெற்ற இடைக்கால மாதாந்திரத் தொகை/குடும்பத் தொகையை வட்டியுடன் கழித்த பிறகு, திரட்டப்பட்ட வட்டியுடன் CPS-ல் திரட்டப்பட்ட செல்வத்தின் முழு மற்றும் இறுதித் தீர்வைப் பெறுவது என்ற விருப்பத்தை செயல்படுத்தலாம்.




*பக்கம் -4-*




*8.* இந்த உத்தரவின் நோக்கத்திற்காக, "அரசு ஊழியரின் தகுதியான குடும்ப உறுப்பினர்" என்பது பின்வருவனவற்றைக் குறிக்கும்:


*(a)* ஆண் அரசு ஊழியராக இருந்தால் மனைவி அல்லது பெண் அரசு ஊழியராக இருந்தால் கணவர்;


*(b)* இருபத்தைந்து வயதை அடையாத மகன் மற்றும் திருமணமாகாத மகள், சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட அத்தகைய மகன் அல்லது மகள் உட்பட, அல்லது சட்டப்பூர்வ திருமணத்திற்கு வெளியே பிறந்த மகன் அல்லது மகளும்;


*(c)* உடல் அல்லது மனக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகன் அல்லது மகள் (பார்வைக் குறைபாடு, மனநோய், அறிவுசார் குறைபாடு அல்லது பல குறைபாடுகள் உட்பட) அவர்களை வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க இயலாதவர்களாக ஆக்குகிறது;


*(d)* இருபத்தைந்து வயதை அடைந்த திருமணமாகாத, விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகள்கள், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வருமான அளவுகோல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு;


*(e)* திருமணமாகாத அரசு ஊழியர்களின் விஷயத்தில் தந்தை மற்றும் தாய், வளர்ப்பு பெற்றோர் உட்பட; மற்றும்


*(f)* திருமணமாகாத அரசு ஊழியரின் விஷயத்தில், சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட மகன் மற்றும் மகள், தந்தை, இல்லையெனில் தாய், அத்தகைய நபர் இறந்த அரசு ஊழியரைச் சார்ந்தவர் என்று அறிவிக்கப்பட்டால்.




*9.* TAPS விதிகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை, அனைத்து பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் மாதாந்திர தனிப்பட்ட பங்களிப்புகளைப் பிடித்தம் செய்தல் மற்றும் பொருந்தக்கூடிய அரசாங்கப் பங்களிப்புகளைச் செலுத்துதல் ஆகியவை, CPS-ஐ நிர்வகிக்கும் தற்போதுள்ள வழிமுறைகள் மற்றும் விகிதங்களின்படி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அரசு மேலும் உத்தரவிடுகிறது.




*10.* இந்த அரசாணையின் ஆறாவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்காலத் தொகை முற்றிலும் தற்காலிகமானது. TAPS விதிகளை செயல்படுத்துவதற்கான மாற்று நடவடிக்கையாக இவை செயல்படும். TAPS விதிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்போது இந்த உத்தரவுகள் தானாகவே ரத்து செய்யப்படும். இந்த உத்தரவின் கீழ் அனுமதிக்கப்பட்ட இடைக்கால நன்மைகள் எந்தவொரு நபருக்கும் சட்டப்பூர்வ உரிமையை நீட்டிக்காது. TAPS-ன் கீழ் உள்ள உரிமைகள் மற்றும் தகுதி, TAPS விதிகளில் அறிவிக்கப்படும்போது இருக்கும்.




*11.* TAPS விதிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டவுடன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான தகுதியான மாதாந்திரத் தொகைகள் மற்றும் பணியில் இருக்கும்போது மரணம் அல்லது ஓய்வுக்குப் பிந்தைய மரணம் காரணமாக தகுதியான குடும்பத் தொகைகள், TAPS விதிகளின்படி விரிவாக மதிப்பிடப்பட்டு நிர்ணயிக்கப்படும். வழங்கப்பட்ட இடைக்காலத் தொகைகளுக்கும் TAPS விதிகளின் கீழ் உள்ள இறுதி நன்மைத் தொகைக்கும் இடையே ஏதேனும் வேறுபாடு இருந்தால், TAPS விதிகளின் கீழ் உள்ள நன்மைகள் அல்லது CPS-ல் இருந்து நிலுவைத் தொகை அல்லது மீட்பு மூலம் சரிசெய்யப்படும். மேலும், ஒரு தகுதியற்ற நபருக்கு இடைக்கால மாதாந்திரத் தொகை/குடும்பத் தொகை வழங்கப்பட்டிருந்தால், இந்த உத்தரவின் கீழ் அல்லது TAPS விதிகளின் கீழ் எந்தவொரு நன்மையையும் கோருவதற்கான உரிமையை அது வழங்காது. அத்தகைய தொகைகள் உடனடியாக நிறுத்தப்படும். ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை, TAPS விதிகளின் கீழ் தகுதியான நன்மைகளுடன், பொருந்தக்கூடிய வட்டியுடன் அத்தகைய நபர்களிடமிருந்து முழுமையாக மீட்கப்படும்.




இதோ இந்த அரசாணையின் தமிழாக்கம்:




*பக்கம் 5*




12. இடைக்கால மாதாந்திர குடும்ப ஓய்வூதியத்தின் அனுமதி, எடுப்பு மற்றும் வழங்கலுக்கான விரிவான வழிமுறைகள் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.




13. இடைக்கால ஓய்வூதியங்கள் பின்வரும் வைப்புத் தலைப்புக் கணக்கில் வழங்கப்படும்: 




*"(K) வைப்புகள் மற்றும் முன்பணங்கள் - (a) வட்டி தாங்கும் வைப்புகள் - 8342.00 பிற வைப்புகள் - 120 இதர வைப்புகள் - FO குழும நிதி இடைக்கால ஓய்வூதியத்திற்காக*




*801 - வரவுகள் 01 - வட்டி தாங்கும்* 


_(IFHRMS குறியீடு 8342 00 120 FO - 80101)_




*802 - வெளியேற்றம் 01 - வட்டி தாங்கும்* 


_(IFHRMS குறியீடு 8342 00 120 FO - 80201)_"


*(ஆளுநரின் ஆணைப்படி)*

M.A. சித்திக்* 

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்

Friday, 24 April 2026

கொஞ்ச(ம்) வேண்டும் - யாழிசை செல்வா

 90களில் நடக்கும் கதை இது 

எதற்காகவும் மறுத்தோ மல்லுக்கு நிற்பதோ தெரியாத வாழ்வை மட்டும் வழமையாய் கொண்ட வாழ்வுதான் கருப்பசாமி உடையது. அப்படியான பொழுதில் ஒரு நாள் சித்ரா வருகிறாள் அவன் வாழ்வில்.... பின் நடப்பது என்ன? 


புரட்சிப் புயல் கண்ணன் 

தேர்ந்த பட்டதாரி... வாழ்வோடு கலந்த அரசியலை வகைத்தொகை இன்றி விமர்சிப்பவன். 

சுருக்கெண குத்தும் முள்ளாகவும் சில்லென நனைக்கும் பனியாகவும் இருப்பவன். 

ஒரு நாள் பலியானான்... 

நடந்தது என்ன? 


மாயி மகன் மாயாண்டி 

புரட்சி புயல் கண்ணனின் பள்ளித் தோழன். 

நண்பனின் மறைவுக்கு நியாயம் தேடும் நாயகம் இவன்....

பின் நடந்தது என்ன? 


ஊர் குடும்பர் போத்திராசா 

இவர் தலைமையில் கட்டுக் குழையாத கட்டுப்பாடுகளோடு  நிமிர்ந்த கிராமம்...

மறைந்த நீதியை மறுபடியும் தேடுகிறது....


அறுத்துக் கட்டிய ஆனந்தி 

தொலைந்த வாழ்வின் முகவரியை கொஞ்சம் தேடியதில் தொலைந்தாளா?.... தேர்ந்தாளா....?

நடந்தது என்ன? 


மாப்பிள சம்சுதீன் 

கருப்பசாமியும்‌ சம்சுதீனும் ஒன்றாய் படித்த பள்ளி தோழர்கள்...

நடக்கும் நாடகத்தில் நாயகம் ஆனார்கள்...

நடந்தது என்ன? 


கொஞ்ச நேரமாவது கொஞ்ச வேண்டும்... எனும் சித்ராவின் ஏக்கம்... எதிர்பார்ப்பு... என்னவாய் மாறியது?

காத்திருப்புகள் மட்டுமே கனவாக  இருக்கையில் கடை தேற்றம் எப்படி நடக்கும்?


எதற்கு கொஞ்ச வேண்டும்???



Monday, 9 March 2026

(1)

சிதறிச் சிரிக்கும் 

மஞ்சள் வெயில் 

இருண்டு கிடக்கிறது 

ஏழையின் குடில்!

(2)

மலைகள் சிதைந்து 

மாளிகையாய் மாறின 

பறவையின் கூடு 

காணாமல் போனது! 


(3)

ஓடவும் வழியில்லாததால் 

ஒதுங்கவும் இடம் தெரிய வில்லை 

எலி வலைக்குள் அகப்பட்டு 

மரணத்தை யாசிக்கின்றது மனம்!


(4)

இருளின் மாயைக்குள் 

தெரியாமல் விழுந்த வெளிச்சப் புள்ளிகள் 

இரவையும் பகலையும்

எங்கே எனத் தேடுகின்றன!

(5)

ஒழுங்காக கற்றவர் எல்லாம் 

உறுத்தேரும் போராட்டத்தில் உள்ளனர் 

தடம் மாறிய அனைவரும் 

தாளாளராய் அதிகாரம் செய்கின்றனர்!


(6)

ஊர் தோறும் பள்ளிகள் 

கேட்டு போராட்டம் நடக்கிறது 

தெருவுக்கொரு சாராயக்கடை திறந்ததில்

தினமும் சாவுமணி ஒலிக்கிறது!


(7)

எழுதப் படிக்க வேண்டுமென

உழுதகாடு விலை போகிறது 

மாடி வீட்டுத் தோட்டத்தில் 

கற்ற கல்வி உரமானது!


(8)

வேண்டுதல்கள் சுமந்தபடியே

ஒவ்வொரு நவராத்திரியும் கடக்கிறது

தனக்கான இரவு தெரியாததால்

தனிமையில் இருக்கிறாள் முதிர்கன்னி!


(9)

நாளுக்கு நாள் நீளும் 

அரசியல் சதுரங்க ஆட்டம் 

தானே பலியாகும்

அப்பாவி மனிதர்கள்!

(10)

உழுதகாடு விற்று மகளுக்கு

தந்தை சீர்வரிசை கொடுக்கிறான்

மலடிப் பட்டம் சுமந்து

மகள் போனபடி திரும்புகிறாள்!


(11)

கன்னியின் ஊடல்

ரணமாய் இருக்கும்//

அவள் கண்ணிமைத்தால் போதும்

கவலைகள் பஞ்சாய்ப் பறக்கும்!

(12)

பெருகிக்கொண்டே இருக்கிறது

இரவின் நிழல் மட்டும்

அருவமின்றி நுழைந்ததால்

வலி அப்போது தெரியவில்லை!