மனம் என்னும் பறவை!
========================
பெருகிக்கொண்ட சுமைகளை தூக்கியபடி
வெகுதூரம் கடந்தபிறகு
கால்களை பிணைக்கும்
தழைகளின் வலி இப்போது தளர்ந்துவிட்டது!
கெடுமதியாய் பிடித்து
வரம்பற்ற மோகத்தில் ஆழ்த்திடும் வழிப்பயணத்தை
தொலைத்த நிம்மதியில்
என் இரைப்பை முழுவதும் நிறைந்து வழிகிறது
இப்போது ஈரத்தின் வாசம்!
கதியாய் எழுந்த காற்றோட்டம் போல்
சுகமாய் நிமிர்ந்த
வெண் மேகத்தின் ஒளிபோல்
சுடர்ந்து எரியும் அகல்விளக்காய்
விடிவானம் தெரிகையில்
தொலை தூரம் முழுமையும்
விடியலின் கீற்றுகள் விண்ணப்பம் போடுகிறது
என் விடியலுக்காக...!!
அதனால்...
கடக்க முடியாத கனவுகள்
உலவிடும் காற்றாகி
பிடித்தங்களை பிடித்தபடி
அலாதியாய் நடக்கையில்
வீம்புக்கு முளைத்திடும் வினாக்களின் கூர்மையை
இடம் நகர்த்தும் துணிவுவோடு எழுகிறது
என் மனம் என்னும் பறவை!
யாழிசைசெல்வா
19/06/2026
No comments:
Post a Comment