கனவிலாவது வருவாயா
=========================
இதழ் துடிக்கும் முன்பே
இதயம் படித்து
கனவுகளைப் பெருக்கி
காற்றின் கரம் பற்றி
கற்பனைத் தேரேறி
சல்லாபத்தோணியாய்
நீந்தி விளையாடும்
அலை தீண்டும் குறும்பாய் பரவி
ஆழியாய் என்னை அனைத்துக் கொள்ள
கனவிலாவது வருவாயா....?
கவிஞர் யாழிசைசெல்வா
05/04/2025
No comments:
Post a Comment