உலகை மாற்றும்
பெற்றோரின் பாதைகள்
=======================
தனக்கென்று தனியொரு
உலகம் ஏதுமில்லாமல்
வினைப்பயன் இதுவோ என்றென்னாமல்
ஏற்றுக்கொண்ட வாழ்க்கையை
மாற்றும் மந்திர சாவி கொண்டு
மடை திறந்த வெள்ளமாய்
யாவரும் அறியாத பொழுதிலும்
புதிய சகாப்தம் படைத்திடும்
படைப்பின் ஆதார சக்தியான பெற்றோர்
வகுத்திடுவார் புதிய நீதி!//
இன்னும் முடியாத பொழுதை துரத்திக் கொண்டு
சுழன்று அடிக்கும் புயலையும்
பட்டெனத்தள்ளி சட்டெனப் பூத்திடும்
சாகச வித்தையை
காட்டும் வல்லமை
அவனியில் இவர்களுக்கு இணை
காலம் கையளிக்க வில்லை
என்பதை இவர்கள் அறியார் - இருப்பினும்
தடையாய் எரிமலை எழுந்தாலும்
தகர்க்கும் துணிவு மட்டும்
ஒரு நாளும் ஓய்வதில்லை!//
பாதையின் நெருஞ்சி முள்ளை
பட்டுக்கம்பளமாய் பாவித்து பயணித்து
கலங்கரை விளக்கமாய் காட்சி தந்து
எப்போதும் புன்னகை மட்டுமே பூத்திடும்
பெற்றோரன்றி பூமியில் யாருமிலர்!//
பூமி பந்தும்
நிற்காமல் சுற்றுவதும்
அச்சத்தை அறைந்த
இவர்களின் சுழற்சியின்
சூட்சுமத்தைக் கண்டறிவதற்காக தானோ?//
கவிஞர் யாழிசைசெல்வா
தேனி மாவட்டம்
02/06/2025
No comments:
Post a Comment