Saturday, 12 July 2025

பகுதி 03 யாழிசைசெல்வா

 

பகுதி - 03

      பகல் முழுவதும் மறைச்சு ஒளியவச்ச வெட்கத்தை இரவு வந்ததும் முழுசா தொறந்து விட்ட மாதிரி சூரியன் மறைந்ததும் இருளின் மை எங்கும் பரவிக் கிடந்தது. இரவு ஏறி ஒரு சாமாம் கடந்திருந்தது. சுக்காங்கல்லும் சரளக் கள்ளுமாக கிடந்த பாதைகளின் இரண்டு பக்கமும் புளிய மரம், மாமரம், அரசமரம், வேப்பமரம் நீண்டு தன் கிளைகளைப் பரப்பி இருளை இறுக்கமாக பிடித்துப் பாதையில் பரப்பி வைத்திருந்தது. அந்த இரவு நேரத்துல யாரும் தன்னந்தனியா போகிறதுக்கே பயப்படுற மாதிரி அப்படி ஒரு இருட்டுல நாலு மாட்டு வண்டிகளும் தேனி சந்தை நோக்கி போய்கிட்டு இருந்தது. பெரும்பாலும் தேனி சந்தைக்கு போகும்போது கூட்டமா போறது தான் பழக்கம். இது ஆதி காலத்துல இருந்து இடம் விட்டு இடம் நகரும் மனித கூட்டத்தோட வழி வழியாக வந்த பழக்கம். இதுல ஒரு வசதியும் இருந்தது வழியில் எதுவும் பிரச்சனை வந்தா கூட்டமா சேர்ந்து எதிர்கொள்றதுக்கு வசதியா இருந்ததால் இது வாடிக்கையா தொடர்ந்து கிட்டு இருந்தது.

     நாலு வண்டிகளும் ஆமை நகருகிற மாதிரி மெல்ல ஊர்ந்து நகர்ந்துகிட்டு இருந்தது. சாதாரண மாட்டு வண்டியா இருந்தா வேகமா உருண்டோடி போய்விடும். சுமைகளை ஏத்திக்கிட்டு போற பார வண்டிகிறதால‌ மெதுவாத்தான் போகும். வேகமா போனா பாதைகள் இருக்க மேடு பள்ளத்துல ஏறி இறங்கும் போது வண்டி கொடை சாய்ந்து கீழே கவுந்து விடும். அதனாலே என்னவோ வண்டி ஓட்டுறவன் மாடுகளை அடிச்சு ஓட்டாமல் பாதாம் எதமா பார்த்து ஓட்டணும். அந்த பக்குவம் எல்லாருக்கும் வருவது கிடையாது. இடம் தடம் பார்த்து நேக்கு போக்கு பார்த்து அந்த நேரத்துல வண்டி ஓட்டி யோட மனநிலையை பொறுத்து தான் பயணம் சுகமா அமையுறதும் சுணக்கம்மா முடிகிறதும் இருக்கு.
சின்ன வயசுல இருந்தே மாரியப்பனும் கருப்பசாமியும் அவங்க அப்பனோட பாரவண்டி ஏத்திக்கிட்டு கூட மாட ஒத்தாசையா போய் வந்தபோது கத்துக்கிட்ட பழக்கத்துல அவர்களுக்கும் ஒட்டிக்கிட்டது.

     ஒழவு காட்டுல உழுகிற முன்னத்தி ஏறு மாதிரி மாரியப்பனோட பாரவண்டி முன்னால போய்கிட்டு இருந்தது. ஊரைத் தாண்டி தேனி போகிற பெரிய பாதையில மாட்டு வண்டி ஏறி கொஞ்சம் தூரம் போனதும் சுக்கான் கல்லு மேல வண்டிச்சக்கரம் மேல ஏறி கீழே இறங்கும்போது நல்ல ருசியோட ஆட்டுக்கறி மென்னு திங்கும் போது கடை வாயில கருங்கல்ல கடிச்ச மாதிரி 'கடார்னு' சத்தம் ஒன்னு கேட்டது. சத்தம் கேட்டது மாடு வெருண்டோட முயன்ற போது மூக்கணாங்கயிறு பதமா இழுத்து புடிச்சவன் ரெண்டு மாடுகளோட பிட்டத்துல மாரியப்பன் தான் உள்ளங்கையால பூப்போல வருடி கொடுத்தான்.  மாரியப்பனோட உள்ளங்கை சூடல மாடுக ரெண்டும் சமநிலைமைக்கு திரும்பி இருந்தது. மறுபடியும் ஆமை போல மாட்டுவண்டி உருண்டோடத் தொடங்கியது. மத்த வண்டிகளும் எறும்பு கூட்டம் போல வரிசையா வந்துகிட்டு இருந்தது.

       பாதைகளத்தாண்டியிருந்த தோட்டத்துல ஆளு உயரத்துக்கு சோளக்கருதுகள் முத்தி விளைந்து வாடைக்காத்துக்கு தலையாட்டி பொம்மை போல அப்படி இப்படி ஆடிக் கொண்டிருந்தது.  சோள கொள்ள நடுவுல காக்கா குருவிகளை விரட்டுவதற்கு நட்டு வச்ச பொம்மை ஒன்னு திடீர்னு திரும்பி பார வண்டிகளை பார்த்துக் கொண்டிருந்தது. ஏதேச்சையாக சோளக்காட்டு பக்கம் திரும்பி மாரியப்பன் அதை கவனித்திருந்தான். அவனையும் அறியாமல் இடுப்புல சொருகி இருந்த சூரிக்கத்திய வலது கையால தொட்டுத் திரும்பி இருந்தது. பாதையில ஒரு கண்ணும் சோளக்காட்டுல ஒரு கண்ணுமா மாறி மாறி பாத்துகிட்டு இருந்தான். வண்டியோட வேகத்துக்கு இணையாக சோள கொள்ள பொம்மையும் நகர்ந்து கொண்டு இருந்தது. தனக்கு பின்னால வருகிற பார வண்டிகளுக்கு சேதிய கடத்துவதற்கு என்ன பண்ணலாம்னு யோசித்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான். சட்டுனு பொரி தட்டின மாதிரி பழைய பழக்கம் ஞாபகம் வந்ததும் சாட்டை கம்பை எடுத்து மாட்டோட முதுகுல தொடர்ச்சியா சுளிர் துளிருனு அடிச்சதும் சத்தம் ஆள் அரவமில்லாத அந்த தன்னந்தனி பாதையில துல்லியமா காத்துல பரவியது. சத்தம் கேட்டதுமே மத்த பார வண்டிகளும் தங்களோட செய்கையில மாற்றத்தை கொண்டு வந்துட்டார்கள். அதை பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் கண நேரத்திற்குள் சுற்று முற்றிலும் பார்த்து நிலவரத்தை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரியான முன் தயாரிப்பில் இறங்கி விட்டார்கள்.

      முன்னாள் உருண்டோடிக் கொண்டிருந்த தனது மாட்டு வண்டியை நிறுத்துவதற்காக செவலை காளைகளின் மூக்கனாங்கயிறுகளை சடக்கெண இழுத்து பிடித்து நிறுத்தி இருந்தான் மாரியப்பன். சற்று தாமதித்திருந்தால் பாதையின் முன்னாலிருந்த பெரிய பள்ளத்தில் மாட்டு வண்டி கவிழ்ந்திருக்கும். அப்பாடா தப்பித்தோம் என மூச்சு வாங்கி மாரியப்பன் நிற்பதற்குள் கையில் சிலம்பக் குச்சிகளோடு பத்திற்கு மேற்பட்ட தடியர்கள் வண்டிகளை சுற்றி வளைத்து விட்டார்கள். ஒவ்வொரு தடியர்களும் உருண்டு திரண்ட வலுவான தோள்களோடு எதையும் எதிர்கொள்ள தயாராக நின்று கொண்டிருந்தார்கள். சிறுத்தையிடம் அகப்பட்டு கொண்ட மான் போல் ஆகிவிட்டது பாறை வண்டியில் இருந்தவர்களுக்கு. நடிகர்களின் கூட்டத்தில் இருந்த ஒருவன் முன்னால் வந்து "வண்டி அப்படியே விட்டுட்டு எல்லாரும் ஓடிப் போயிருங்க. உங்களுக்கு உயிராவது மிஞ்சும். இல்ல அப்படின்னு பிடிவாதம் புடிச்சீங்கன்னா எல்லா பேரோட உசுரையும் சோள காட்டுக்கு இறையாக்கிட்டு வண்டியை எடுத்துக்கிட்டு நாங்க போயிருவோம். உங்களுக்கு வசதி எப்படி?"என்றான் அவர்களின் தலைவர் போன்றவன்.

     நாலு வண்டிகளில் இருந்தும் வண்டி ஓட்டிகள் கீழே இறங்காமல் அப்படியே வண்டியிலே அமர்ந்திருந்தார்கள். அவர்களது என்ன ஓட்டத்தை கீழே நின்று கொண்டிருந்த தலைவன் போன்ற தடியன் அளவெடுத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கடந்து இருந்தும் அவர்கள் எந்த விதமான பதிலையும் கூறாமல் சிலை போல் அப்படியே அமர்ந்திருந்தார்கள். அந்தச் செயல் கூட்டத்தின் தலைவனுக்கு பெருத்த எரிச்சலை உண்டாக்கி இருக்க வேண்டும். "என்ன புடிச்சு வச்ச புளி மூட்ட மாதிரி அப்படியே அசையாமல் உட்கார்ந்து இருக்கீங்க? விட்டுட்டு ஓடுனா உசுராவது மிஞ்சும். இல்லன்னா அப்புறம் சொல்றதுக்கு என்ன இருக்கு?"தனது முட்டை கண்களை உருட்டி மிரட்டி கொண்டிருந்தான் தடியர்களின் தலைவன்.

     "இந்த வண்டிகள்ல இருக்க பொருள்களின் மதிப்பு உனக்கு தெரியுமா? இது அப்படியே விட்டுட்டு போனா இதோட சொந்தக்காரங்களுக்கு யார் பதில் சொல்றது. எங்கள நம்பி பொருளை கொடுத்து விட்டுட்டு நம்பிக்கையோடு வீட்டில உறங்கிக்கொண்டு இருக்கிறாய் அவர்களை எப்படி நாங்கள் ஏமாற்றுவது! இதெல்லாம் உனக்கு எப்படி தெரியப்போகுது! அடுத்தவன் பொருளைத் திருடி திங்கிற களவாணி கூட்டம் தானே நீங்க! உங்ககிட்ட போயி நியாயதர்மம் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?"என்றான் மாரியப்பன்.

     "டேய் பொடிப் பயலே...! உனக்கு என்ன துணிச்சலுருந்தா யேங்கிட்ட இப்படி பேசுவ?  பேசாம நான் சொல்ற மாதிரி செஞ்சிட்டு போயிடு! இல்லன்னா நடக்கிறதே வேற"என இருமாப்பாய் பேசத் தொடங்கி விட்டான் தடியர்களின் தலைவன்.

     "உன்னோட உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படற ஆளு நான் கிடையாது. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ"

     "சுண்டைக்காய் பயலே! யேன்கிட்டயே உன்னோட வீராப்பா காட்டுறியா? திரும்பத் திரும்ப உன்கிட்ட நான் சொல்லிக்கிட்டு இருக்க மாட்டேன்! மரியாதையா வண்டியை விட்டு இறங்கி ஓடிப்போயிடு. அதுதான் உனக்கு உன் கூட்டத்துக்கு நல்லது. தேவையில்லாம உசுர விட்டுட்டு போயிராத"

     எதுவும் பேசிக்கொள்ளாமல் மாரியப்பன் தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து வலது பக்க வண்டியோட தட்டியிலிருந்து விரட்டென்று சிலம்பு குச்சியை உருவிக்கொண்டு எதிரே நின்று கொண்டிருந்த கூட்டத்தின் தடியன் மேல் குரங்கு போல் தாவி விட்டான். திடீரென மாரியப்பன் மேலே விழுந்ததும் கூட்டத்தின் தடியன் கீழே சரிந்து விழுந்து விட்டான். தடியர்களின் தலைவன் சுதாரிப்பதற்குள் மற்ற தடியார்களை எதிர்கொள்வதற்காக சிலம்பத்தை சுழற்றத் தொடங்கி விட்டான். எதிர்பாராமல் நடந்து விட்ட திடீர் தாக்குதலால் மற்ற தடியார்களும் சிறிதும் தாமதிக்காமல் மாரியப்பனை சுற்றி வளைத்து விட்டார்கள். வலது காலை முன்னால் நகர்த்திய மாரியப்பன் அட்ட கண்ணால் மற்ற தடியர்களை அளவெடுத்துக் கொண்டே சிலம்பத்தை சுழற்றித் தாக்கத் தொடங்கி விட்டான்.

      தடியர்களின் மொத்த கவனமும் மாரியப்பன் மேல் இருந்ததால் இரண்டாவது வண்டியில் வந்திருந்த கருப்பசாமி தனது கூட்டாளிக்கு நேர்ந்த துயரத்தையும் தமது கூட்டத்தை அடுத்து எப்படி காப்பாற்றுவது என்ற யோசனையும் அவனுக்கு ஒரே நேரத்தில் தோன்றியது. தடியர்களை மாரியப்பன் பார்த்துக் கொள்வான். சிலம்பத்தில் அவனை வெல்வது எந்த கொம்பனாலும் முடியாது. பார வண்டிகளை சூதானமாக பாதையில் வெட்டி வைத்திருக்கிற குழியைத் தாண்டி கொண்டு போவதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையில் இறங்கியதோடு இதனை செயலாற்றுவதற்காக மற்ற வண்டி ஓட்டிகளிடம் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.  பார வண்டிகளை அப்படியே சிறிது தூரம் பின்னால் நகர்த்தி பாதையை விட்டு சோளக் காட்டுக்குள் இறக்கி கடந்து விடும் முயற்சியில் ஒவ்வொரு வண்டியாக படிப்படியாக நகர்த்திக் கொண்டிருந்தான்.
     
     தடியர்களுடனான தாக்குதலில் மாரியப்பன் பம்பரம்வாய் சுழன்று அவர்களை தாக்கி கீழே சாய்த்துக் கொண்டிருந்தான். ஏதோ சின்ன பையன் எளிதாக தாக்கி சாய்த்து விடலாம் என்ற நினைப்பில் காலத்தில் குதித்திருந்த தடியர்களின் கூட்டம் ஏமாந்து போனது. ஏமாற்றத்தை முகத்தில் ஏந்தி கொண்டு வழி அறியாமல் வகையாக மாரியப்பன் இடம் அடி வாங்கி அலறிக் கொண்டிருந்தார்கள். திடீரென ஏற்பட்ட சிலம்பச் சண்டைகளின் காரணமாக இருண்ட பாதை முழுவதும் ஒத்தையடி பாதையில் மோகினி பிசாசு ஒன்று சலங்கை கட்டி ஆடுவது போல் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்கெல்லாம் சிலம்பங்களின் ஓசை வலுவிழந்து காற்றில் கரைந்து கொண்டிருந்தது.

      நினைத்த காரியம் கணவாய் போனதால் அடி வாங்கிய தடியர்கள் கூட்டம் விழுந்தடித்துக் கொண்டு சோள காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் விட்டால் போதும் என்று ஓடிவிட்டதால் தனது சிலம்பத்தை எடுத்துக்கொண்டு பார வண்டிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மாரியப்பன் மீது சோளக் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்த தடியர்களின் தலைவன் சூரி கத்தியை பின்னால் இருந்து வீசியதால் முதுகில் சதக்கென்று குத்தியது. "அம்மா"வென்ற அலற லோடு கீழே விழுந்தான் மாரியப்பன்.


      ஒரு வழியாக சோளக்காட்டு வழியாக வார வண்டிகளை அடித்துப் பிடித்து மீண்டும் பாதைக்கு அழைத்து வந்திருந்தபோது மாரியப்பன் போட்ட அலறல் சத்தத்தால் கருப்பசாமி தன் கூட்டாளியைத் தேடி ஓடி வந்து பார்த்தபோது முதுகில் ரத்தம் பெருக்கெடுத்து தரையில் சுருண்டு மயங்கிக் கிடந்தான் மாரியப்பன். உடன் வந்த மற்ற வண்டி ஓட்டிகளும் அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்திருந்தார்கள்.


     " தண்ணிக்குடுவைய எடுத்துட்டு வாண்ணே"தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த வண்டி ஓட்டியிடம் சொன்னான் கருப்பசாமி.


    அரிக்கன் விளக்கின் ஒளியில் மயங்கி சுருண்டு கிடந்த மாரியப்பனை மடியில் கிடத்தினான். தலையில் கட்டி இருந்த துண்டை கிழித்து வலிந்த ரத்தத்தை துடைத்தெறிந்தான். கத்தி பாய்ந்த இடத்திலிருந்து ரத்தம் நிற்காமல் வழிந்தோடிக் கொண்டிருந்தது.  மீண்டும் மாரியப்பனை தரையில் படுக்க வைத்தவ கருப்பசாமி அரிக்கன் விளக்கை வாங்கிக்கொண்டு சோளக்காட்டுக்குள் அங்கும் இங்கும் தேடி மூலிகைகளை பறித்துக் கொண்டு வந்தவன் மாரியப்பன் முதுகில் கத்தி பாய்ந்திருந்த இடத்தின் மீது மூலிகைகளை கசக்கி சாறு பிழிந்து விட்டதோடு கத்தியை அசைக்காமல் மெல்ல உருவி எடுத்து கீழே வைத்தான். மாரியப்பன் முதுகில் கத்தி ஆழமாக பாய்ந்திருந்தது. பறித்து வந்திருந்த மூலிகைச்சாறை காயத்தின் மீது பிழிந்து விட்டான். மிச்சமிருந்த மூலிகைகளை காயத்தின் மீது வைத்து துண்டின் மீது துணியைக் கொண்டு காயத்தை சுற்றி நன்கு கட்டு போட்டு விட்டான் கருப்பசாமி.


      "இந்தா தம்பி தண்ணி"என்றவரிடம் தண்ணியை வாங்கி மாரியப்பன் முகத்தில் படீர் படீரென அடித்து மாரியப்பன் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்தெடுத்து அவனது முகத்தை துடைத்து விட்டான். சுற்றி இருந்த மரங்களில் இருந்து வீசிய குளிர்ந்த காற்று மாரியப்பன் முகத்தில் பட்டதும் கண்ண கசக்கிக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா முழிக்க தொடங்கியிருந்தான். போன உசுரு திரும்புடுச்சுடானு நினைச்சானா என்னவோ கருப்பசாமி சுரக்குடுவையை மாரியப்பன் வாயை திறந்து தண்ணி குடிக்க வைத்தான்.


கொஞ்சம் கொஞ்சமா நினைவு திரும்பியதும் மாரியப்பனுக்கு கத்தி காயத்திலிருந்து சுளிர் துளிரினு சவுக்கால் அடித்தது மாதிரி உடம்பு பூரா வலி பரவத் தொடங்கியிருந்தது.


      "மாரியப்பா.... டேய் மாரியப்பா.... இப்போ உன்னால நடக்க முடியுமா? இல்ல நான் தூக்கிட்டு போகட்டுமா?"என்றான் கருப்பசாமி.


      "இல்ல வேணாம் டா. நானே நடந்துக்கிறேன்"என எழுந்தவனை தோள் கொடுத்து தூக்கி விட்டான் கருப்பசாமி. கூட்டாளியோடு தோள்ல சாஞ்சுகிட்டு மெல்ல நடந்து பார வண்டியிருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான் மாரியப்பன். மற்ற வண்டி ஓட்டிகளும் அவன் பின்னால் அரிக்கன் விளக்கு வெளிச்சத்துல நடந்துகிட்டு இருந்தார்கள்.


      வண்டி அருகே வந்ததும் கருப்பசாமி"மாரியப்பன் ஒட்டி வந்த வண்டியில நான் ஏறிக்கிறேன். என்னோட வண்டில கடைசி வண்டில துணைக்கு வந்த மாடசாமி அண்ணே ஓட்டி வரட்டும். மத்தவுக வழக்கம்போல அவங்க வண்டில வாங்க"என்றான்.


     "அப்ப மாரியப்பன் எந்த வண்டில வருவான்"என்றார் மாடசாமி.


     "மாரியப்பன் என்கூடவே வரட்டும். இப்ப இருக்க நிலைமையில் அவனால் வண்டிய ஓட்ட முடியாது. அதனால நானே என் பொறுப்பில் அவனை பார்த்துக்கொள்கிறேன். நாம வழக்கமா போற பாதையில போகாம குறுக்குப் பாதையில புகுந்து தேனி சந்தைக்கு போலாம். அப்பதான் வீடியோ காத்தால போய் சேர முடியும். மேலும் மாரியப்பனுக்கு வைத்தியம் பாக்கணும். இப்படியே விட்டமுனா கத்தி காயம் ஆள கொன்னுபுடும்"


     "நீ சொல்றதும் சரிதான் தம்பி. நேரத்துக்கு தகுந்தபடி நம்ம மாற்றுப் பாதையில போக வேண்டியது தான். ஏற்கனவே போன வாரம் தாமதமா போனதுனால கடைக்காரங்க எல்லாம் முகம் சுளிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால இந்த வாட்டி சரியான நேரத்துக்கு போய்./.... சேரணும். நம்மள நம்பி பொறுப்பு கொடுத்து இருக்கவங்களுக்கு அப்பத்தான் நம்ம மேல நம்பிக்கை வரும். எடுத்த காரியத்தை செவ்வனே செஞ்சு முடிக்கணும். நம்ம பொழப்பு இதுல தான் இருக்கு. நாணயம் கெட்டுப் போயிட்டா நம்ம பொழப்பு ஓடாது"என்றார் மாடசாமி.


      "அதெல்லாம் இந்த முறை எந்த தவறு நடக்காதுண்ணே. திடீர்னு எதிர்பாராத சம்பவம் நடந்து போச்சு. இல்லாட்டி இந்நேரம் பாதி தூரம் கடந்து இருப்போம். எல்லாம் நம்ம நேரம் காலம். அதுக்கு என்ன செய்ய முடியும். அந்த மட்டிலும் மாரியப்பன் ஓட துணிச்சலால் நம்ம பொருளையும் உசுரையும் இன்னைக்கு காப்பாத்திக்கிட்டோம். இல்லன்னா என்ன பண்ணி இருப்போமோ.... நினைக்கும்போதே நெஞ்சுக்குள்ள அறுக்குது"என்றான் கருப்பசாமி.


    "நீ சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை தம்பி. யாருமே மறுக்க முடியாது. தலைக்கு வந்தது தலப்பாகையோடு போயிருச்சுன்னு நினைச்சுக்க வேண்டியது தான்" என்றார் மூன்றாவதாக வந்த வண்டியோட்டி.


     "இந்த ஆத்துவான காட்டுல பேசிக்கிட்டே நிக்க வேண்டாம். சட்டுபுட்டுன்னு எல்லாரும் வண்டில ஏறிக்கோங்க இந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பிடலாம்"என்றான் கருப்பசாமி.


      மாரியப்பனை அவனது வண்டியில் ஏற்றி பாதுகாப்பாய் அமர வைத்துவிட்டு கருப்பசாமி வண்டியில் ஏறி செவலக்காளைகளை பதமாக ஓட்ட தொடங்கினான். மற்ற வண்டிகளும் அவனது போக்குக்கு ஏற்ப இருளை துரத்திக் கொண்டு ஓடத் தொடங்கியிருந்தது. 


      கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது. தேனி சந்தைக்குள் நான்கு மாட்டு வண்டிகளும் நுழைந்தன. ஏற்கனவே வரிசை கட்டி நின்று கொண்டிருந்த வண்டிகளுக்கு பின்னால் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தன. பாரம் இறக்க வேண்டிய கடைகளின் முன்பாக ஒரு வழியாக நாலு வண்டிகளும் வந்து சேர்ந்தன. மூட்டைகளை இறக்கி எண்ணி கணக்குகளை சரியாக ஒப்படைத்து விட்டோம் என்ற நம்பிக்கையில் வேகமாக திரும்பிக் கொண்டிருந்தான் கருப்பசாமி. வந்தவனின் வேகம் சட்டெனத் தடைப்பட்டது. இறக்கிய மூட்டைகளை எடை போட்டு பார்த்துக் கொண்டிருந்தார் துரைசாமி. திடீரென சந்தேகம் வந்ததால் ஒரு மூட்டையை பிரித்து பார்த்தவரின் முகத்தில் ஏமாற்றம் பரவிக் கிடந்தது. மூட்டைக்குள் கையை விட்டு உள்ளே இருந்த பஞ்சை அள்ளி கருப்பசாமியிடம்  காண்பித்தபோது கருப்புசாமி முகத்தில் இருள் அப்பிக் கொண்டது.

     


   

No comments:

Post a Comment