வாசலில் பத்தடி உயரத்திற்கு மேல் வளர்ந்து கிளை பரப்பி நின்ற வேப்ப மரத்தின் நிழலின் ஆளுமையில் வீட்டின் முன்பகுதி கோடை காலத்தின் மதியான வேளை என்பதையும் மறக்கடித்திருந்தது. வேப்ப மரத்தின் குளிர்ந்த காற்று இதமாக வீட்டின் வாசல் தாண்டி உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. வேப்ப மரத்தின் கிளைகளில் அமர்ந்ததோடு வேப்பம்பழத்தினை தன் அழகால் கொத்தி ருசித்துக் கொண்டிருந்த காகம் ஒன்று விருட்டெனச் சிறகடித்து மேற்கே சென்றதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சண்முகம். மழைநீர் அரித்ததால் வெளியே தெரிந்த வேப்ப மரத்தின் வேர்களில் ஒன்று நீண்டு பரவி இருந்த இடத்தின் முடிவில் சிறியதொரு கழிவறை கட்டப்பட்டிருந்தது. சிறிய பித்தளை அண்டாவின் முக்கால் பகுதி தேங்கிய தண்ணீரில் தன் அடிப்பகுதி நெளிந்த அடையாளத்தைக் காட்டிக்கொண்டு செம்பு மிதந்தது.
No comments:
Post a Comment