Sunday, 11 May 2025

சொல்லாயி நெனப்புல

சிறகடிச்சுப் பறக்குது 

=====================

ஏரோட்டும் கையில் 

தேரோட்டம் போல//01


வைக்கோல் பொதியேத்தி

துள்ளிக் குதிச்சு//02


அந்திவானைத் துரத்தி

அலையாய் மிதந்து //03


மயிலக்காளை ரெண்டோட

மாட்டுவண்டி யோட்டி//04


அய்யனார் சாமிபோல

முறுக்குமீசை தடவுற//05


விவசாயி குருசாமி 

நெனப்புல நீந்தி//06


வெள்ளாவில வெளுத்த

பஞ்சவர்ணச் சேலைகட்டி //07


செல்லாயி முகம் 

சிறகடித்துப் பறக்குது//08


கவிஞர் யாழிசைசெல்வா 

11/05/2025











No comments:

Post a Comment