சொல்லாயி நெனப்புல
சிறகடிச்சுப் பறக்குது
=====================
ஏரோட்டும் கையில்
தேரோட்டம் போல//01
வைக்கோல் பொதியேத்தி
துள்ளிக் குதிச்சு//02
அந்திவானைத் துரத்தி
அலையாய் மிதந்து //03
மயிலக்காளை ரெண்டோட
மாட்டுவண்டி யோட்டி//04
அய்யனார் சாமிபோல
முறுக்குமீசை தடவுற//05
விவசாயி குருசாமி
நெனப்புல நீந்தி//06
வெள்ளாவில வெளுத்த
பஞ்சவர்ணச் சேலைகட்டி //07
செல்லாயி முகம்
சிறகடித்துப் பறக்குது//08
கவிஞர் யாழிசைசெல்வா
11/05/2025
No comments:
Post a Comment