Thursday, 22 May 2025

காதல் என்னும் கவிதை கவிஞர் யாழிசை செல்வா

காதல் என்னும் கவிதை 

=====================

கவிஞர் யாழிசைசெல்வா 

======================

       செல்லாயிம்மன் கோயில் திருவிழா.... ஆங்காங்கே தனித்தனியா வைத்துக் கொண்டிருந்த பொங்கப் பானை பொங்கியதும் குலவைச் சத்தம் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது! எல்லோருடைய கவனமும் பொங்கல் பானை மீதிருக்க, பூரணி மட்டும் கெண்டை விழி சுழட்டி தூரத்திலிருந்த மாமன் மகன் அய்யனாரைப் பார்க்க, வட்டமிடும் வண்டாக அய்யனாரும் கையில் மல்லிகை சரம் வைத்திருந்தவனை, விழியில் மின்னலடித்து பூத்தாள் பூரணி! 


       எல்லோருடைய கவனமும் படையலில் இருக்கும்போது வாழை இலையில் பொங்கலை வைத்துக் கொண்டு அலையடித்துக் கொண்டிருந்த குளத்தில் கால் நனைத்து கொண்டிருந்த அய்யனார் அருகே செந்தூரப் பட்டுத்தாவணி கட்டி சில்லென்று பூத்து அமர்ந்தவள் "யேன் அத்தான்! அதற்குள் அப்படி என்ன அவசரம்? கை நிறைய மல்லிகை பூ வச்சுக்கிட்டு இப்படியா எல்லாரும் பாக்குற மாதிரி வந்து நிப்பாங்க? எனக்கு மானமே போயிருச்சு" என்றவள் பொய்யாய் கோபித்து முறைத்துப் பார்த்தாள்!


     "அடியே! நீ லேசு பட்டவ இல்லடி! நீதானே மல்லிகைப்பு வேணும்னு சொல்லிருந்த? ஆசையோட வாங்கிட்டு வந்தா, இப்படி பேசுற? இதெல்லாம் நியாயமே இல்ல..."என்றான் வெகுளியாய் அய்யனார்!


     "நான் சொன்னது உண்மைதான்! அதுக்காண்டி இப்படியா வந்து நிப்ப?"


    "அதுதான் எல்லாரும் சேர்ந்து நமக்கு கல்யாணம் பேசி நிச்சயம் பண்ணிட்டாங்களெ, அதுக்கப்புறம் என்னடி கவலை வேண்டிக் கெடக்கு?"


    "உனக்கென்ன சொல்லிட்ட.... ஏன் பாடு எனக்கு தானே தெரியும்?"எனக்கூறி முறைத்தாள் பூரணி! 


     "சரி இப்ப என்னை, என்ன செய்யச் சொல்ற?"


     "அதுதேன் எல்லாத்தையும் செஞ்சுட்டியே அத்தான்"


      "என்ன சொல்லுரேன்னெ எனக்குத் தெரியல....?"


      "நீ ரொம்பச் சுளுவா உன்னோட ஆசையை யேங்கிட்ட சொல்லிட்ட, அத நிறைவேத்துறதுக்கு நான் பட்டபாடு எனக்கு தானே தெரியும்!" என்றவள் விழிகள் குலமாயின!


     "நம்ம கல்யாணத்துக்காக நீ பட்ட சிரமம் எனக்கு தெரியும்டி, எல்லாரும் ஒத்துக்கிட்ட பின்னால அதெல்லாம் மாயமா மறஞ்சு போச்சு" எனக்கூறிக் கொண்டே பூரணியை நெஞ்சோடு சாய்த்து கொண்டான்! 


(முடிந்தது)



No comments:

Post a Comment