விழியில் தீ மூட்டி
விரகத் தாலாட்டி
நெஞ்சக் கனல்மூட்டி
நேச பெரு நெருப்பின்
நீங்காத நினைவலைகளை
எப்போதும் தொட்டுச் செல்கிறது
என்னவளின் கனவுகள்!//
இருப்பைத் தொலைத்து
இன்னும் தொலைதூரப் பயணத்தில்
யாருக்கும் தெரியாமல்
யாதொன்றும் அறியாமல்
கடந்த கனவுகளை காற்றில் பறக்கவிட்டு
நூல் அருந்த காற்றாடியாய்
திக்கு திசை தெரியாமல்
சிறகடித்துப் பறந்து
தொலைதூரப் பனை மரத்தில்
தலைகீழாய்த் தொங்கிய நிழலாய்
பூமியில் படர்ந்து காலமே கதியாய்
கருணையே விதியாய்
ககனமே மொழியாய் இருந்தவனுக்கு
காற்று குடியேறிய புல்லாங்குழலாய்
எனக்கான இசையை
என்னுள் இசைத்தவள் மொழிந்தாள்
கலங்காதே கண்ணாளா...
காற்றாய் நானிருக்கும் வரை
கவிதையாய் நீ இருப்பாய்...!
கவிஞர் யாழிசைசெல்வா
08/05/2025
No comments:
Post a Comment