நொய்ய உரையேல்
அன்பில் மிதந்து
ஆசையில் உரைத்து//01
நொய்யல் உரையேல்
அகிலம் போற்றிடு
அரவணைத்து சென்றிடு//02
வடிவாய் பேசும்
வளமை மாற்றிடு//03
இதமான பொழுதில்
இனிமை கூட்டிடு//04
சொல்லில் அம்படுத்து
மலர்க்கணை தொடுத்து//05
மகிழ்ந்து பேசும்
மன்மத ஊர்வலத்தில்//06
செங்கரும்பு கடித்திட்ட
இதழில் உதிக்கும்//07
இன்பப் பேரராய்
இனிது தீண்டி//08
கற்கண்டு வார்த்தையில்
கவிதையாய் வாழ்ந்திட//09
நொடித்துப் பேசும்
நொய்யல் உரையேல்//10
கவிஞர் யாழிசைசெல்வா
11/05/2025
No comments:
Post a Comment