Sunday, 11 May 2025

நொய்ய உரையேல் யாழிசை செல்வா

 நொய்ய உரையேல்


அன்பில் மிதந்து 

ஆசையில் உரைத்து//01


நொய்யல் உரையேல்


அகிலம் போற்றிடு 

அரவணைத்து சென்றிடு//02


வடிவாய் பேசும் 

வளமை மாற்றிடு//03


இதமான பொழுதில் 

இனிமை கூட்டிடு//04


சொல்லில் அம்படுத்து 

மலர்க்கணை தொடுத்து//05


மகிழ்ந்து பேசும் 

மன்மத ஊர்வலத்தில்//06


செங்கரும்பு கடித்திட்ட 

இதழில் உதிக்கும்//07


இன்பப் பேரராய்

இனிது  தீண்டி//08


கற்கண்டு வார்த்தையில் 

கவிதையாய் வாழ்ந்திட//09


நொடித்துப் பேசும் 

நொய்யல் உரையேல்//10


கவிஞர் யாழிசைசெல்வா 

11/05/2025







No comments:

Post a Comment