Monday, 5 May 2025

 மாண்புமிகு மனைவி 

===================

யாழிசைசெல்வா

===============

விட்டும் தொட்டும் விடாத //01

ஐப்பசி அடைமழையில் //02

தூர கிழக்கில் இடி மின்னலைப் புரட்டித் தள்ளி //03

மின்சாரப் பூவாய் //04

இதயத்தில் மலர்ந்த //05

வசந்தத் திருநாளாய் அமைந்த மணநாள் அது! //06


கலையாத கனவுகளோடு காற்றுக்கும் தெரியாமல் //07

கண்ணெழுத்துக் கவிதையில் //08

கார்கால மயிலாய் எத்தனையோ கற்பனைகளோடு //09

ஏகாந்த நினைவுகளைச் சுமந்து கொண்டு//10

எதிர்பார்ப்பில் நீயிருந்தபோது //11

திடீரென இடி விழுந்த வீடாய் //12

மாறிப்போன துயரநாட்களில் தானடி //13

உன்னை நான் அறிந்து உதிர்ந்து போனேன்! //14



இருளை முத்தமிட்டு  தனியே சிறகடித்து //15

அரிதாய் மலர்ந்த குறிஞ்சி பூவாய் //16

அத்தனை துயரங்களையும் அடித்துத் துவைத்து //17

மலர்ந்து சிரித்த உனது புன்னகை முன்னால் //18

ஆணென்ற  கர்வம்  உன் காலடியில் சிதைந்து //19

காணாமல் போன நாளில் தானடி //20

மாண்புமிகு மனைவி நீயென்பதை உணர்ந்து //21

உன் இதழோறப் புன்னகையாய் //22

நானிருக்க தவமாய் கிடந்தேன்! //23

உனக்கான இரவுகளாய் எப்போதும் நானிருக்க?//24


கவிஞர் யாழிசைசெல்வா 

04/05/2025

No comments:

Post a Comment