மாண்புமிகு மனைவி
===================
யாழிசைசெல்வா
===============
விட்டும் தொட்டும் விடாத //01
ஐப்பசி அடைமழையில் //02
தூர கிழக்கில் இடி மின்னலைப் புரட்டித் தள்ளி //03
மின்சாரப் பூவாய் //04
இதயத்தில் மலர்ந்த //05
வசந்தத் திருநாளாய் அமைந்த மணநாள் அது! //06
கலையாத கனவுகளோடு காற்றுக்கும் தெரியாமல் //07
கண்ணெழுத்துக் கவிதையில் //08
கார்கால மயிலாய் எத்தனையோ கற்பனைகளோடு //09
ஏகாந்த நினைவுகளைச் சுமந்து கொண்டு//10
எதிர்பார்ப்பில் நீயிருந்தபோது //11
திடீரென இடி விழுந்த வீடாய் //12
மாறிப்போன துயரநாட்களில் தானடி //13
உன்னை நான் அறிந்து உதிர்ந்து போனேன்! //14
இருளை முத்தமிட்டு தனியே சிறகடித்து //15
அரிதாய் மலர்ந்த குறிஞ்சி பூவாய் //16
அத்தனை துயரங்களையும் அடித்துத் துவைத்து //17
மலர்ந்து சிரித்த உனது புன்னகை முன்னால் //18
ஆணென்ற கர்வம் உன் காலடியில் சிதைந்து //19
காணாமல் போன நாளில் தானடி //20
மாண்புமிகு மனைவி நீயென்பதை உணர்ந்து //21
உன் இதழோறப் புன்னகையாய் //22
நானிருக்க தவமாய் கிடந்தேன்! //23
உனக்கான இரவுகளாய் எப்போதும் நானிருக்க?//24
கவிஞர் யாழிசைசெல்வா
04/05/2025
No comments:
Post a Comment