காதல் கண்ணே
==============
கவிஞர் யாழிசைசெல்வா
======================
கடலில் கால் நினைக்க வந்த முருகனும் மீனாட்சியும் எதிர்பாராமல் இதயத்தை மாற்றிக் கொண்டார்கள்! கடந்த இரண்டு மணி நேரமாக கடற்கரை ஈரமணலில் ஒருவர் மாற்றி ஒருவர் கிறுக்கி வைத்த கவிதைகளின் வழியே காதலை பரிமாறிக் கொண்டிருந்தார்கள் !
அப்போது தான் தொடங்கி இருந்த கோடைகாலம் ஆதலால் பெரிதாக கடற்கரையில் கூட்டம் ஏதுமில்லை! இருப்பினும் ஆங்காங்கு பெரியவர்களும் குழந்தைகளும் கரை தொடும் அலைகளைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தார்கள்!
இதற்கிடையில் முருகன் ஈர மணலில் ஆள்காட்டி விரலால் ஏதோ கிறுக்கியவன் சட்டென எழுந்து சென்றதும், விரைந்து வந்த மீனாட்சி கால் இடறி கீழே விழப்போனவளை, தாவிப் பிடித்துத் தூக்கி நிறுத்திய முருகன்! "அப்படி என்ன அவசரம்?" என்றான் மீனாட்சியைப் பார்த்து " நீ எழுதியதை அலை அழித்து விட்டால் என்ன செய்வது"என்றாள் முருகன் விழிகளிலிருந்து தனது விழியை எடுக்காமலே....
அவளே தொடர்ந்து "இப்படி எத்தனை நாள் கடற்கரை மணலில் காதலை எழுதி வளர்க்க முடிவு செய்துள்ளாய்? நேரில் சொல்ல அத்தனை தயக்கமா?"என்றபடி அவனது வலது கரத்தை தனது இடது கரத்தால் இறுகப் பற்றிக்கொண்ட மீனாட்சி!
"நீயே கவிதை உனக்கு ஒரு கவிதை எழுதினால் எங்கே பிடிக்காமல் போய்விடுமோ என்ற பயம் தான் எனக்கு?"
"நீ எழுதியது பிடிக்காமல் தான் தொடர்ந்து படிக்கிறேனா? அது தெரியாமல் தான் நீயும் தொடர்ந்து எழுதினாயா? நீ சொல்வது நம்புவது போல் இல்லையே!"
"நீலக் கடல் போல் நீண்டு விரிந்த கார்குழல், கெண்டை மீனாய்த் துள்ளும் விழிகள், சிவந்த மாதுளை இதழ், குழி விழுந்த கன்னம், தூளியாய் துடித்தாடும் சிற்றிடை, ஓவியன் எழுத மறந்த பாதச்சுவடுகள், தேனைச் சுற்றும் வண்டாய் தொடர்ந்து உன்னை சுற்றும் வாலிபர்கள், இத்தனை சிறப்பு மொத்தமாய் கொண்ட நீயெங்கே என்னைப் பார்க்க போகிறாய்? என்ற கேள்விதான் என்னை அரித்துத் தடுத்து விட்டது?"
நச்சென்று அவள் கொடுத்த இதழ் முத்தத்தில் இதயம் தறிகெட்டுத் துடித்தது அவனுக்கு....!
(முடிந்தது)
நேர்பட பேசு 13 ஆம் ஆண்டு போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டாவது கதை இது!
No comments:
Post a Comment