Wednesday, 26 March 2025

கோலமிடும் மயிலே மாலையிட வரவா யாழிசை செல்வா

 கோலமிடும் மயிலே மாலையிட வரவா 

=================================

சூரிக் கத்தியோட

உங்கப்பன் எதிரே//01


கேலிக் கண்ணோட

ஊரெல்லாம் பேசும்//02


வேடிக்கை விரட்டும் 

முத்தமாகச் சிரிச்சு//03


கருக்கலில் பூக்கும் 

கனகாம்பரப் பூவே!//04

சுருக்காப் பேசும் 

சீனிப் பட்டாசே!//05


எனக்காகச் சிரிக்கும் 

வெள்ளரிப் பூவே!//06


அந்தி சாயும் 

மழைக் காத்துல//07


சோடிக் கிளியா 

பேசிப் பறந்து//08


வெட்கம் மறந்து 

வெடிச்சுப் பூத்த//09


கோலமிடும் மயிலே 

மாலையிட வரவா?//10

கவிஞர் யாழிசைசெல்வா 

26/03/2025

No comments:

Post a Comment