கோலமிடும் மயிலே மாலையிட வரவா
=================================
சூரிக் கத்தியோட
உங்கப்பன் எதிரே//01
கேலிக் கண்ணோட
ஊரெல்லாம் பேசும்//02
வேடிக்கை விரட்டும்
முத்தமாகச் சிரிச்சு//03
கருக்கலில் பூக்கும்
கனகாம்பரப் பூவே!//04
சுருக்காப் பேசும்
சீனிப் பட்டாசே!//05
எனக்காகச் சிரிக்கும்
வெள்ளரிப் பூவே!//06
அந்தி சாயும்
மழைக் காத்துல//07
சோடிக் கிளியா
பேசிப் பறந்து//08
வெட்கம் மறந்து
வெடிச்சுப் பூத்த//09
கோலமிடும் மயிலே
மாலையிட வரவா?//10
கவிஞர் யாழிசைசெல்வா
26/03/2025
No comments:
Post a Comment