விசித்திரம் நிறைந்த சரித்திரம் அவள்
=====================================
ஆதியின் நெருப்பை கையில் கொண்டவள் //01
தாய்மையின் வரமாக எழுந்து நின்றவள் //02
சுமைகளை கொண்டாடித் திளைக்கும் தமக்கை //03
வேடிக்கைகளை விரும்பிப் பற்றும் தங்கை //04
ஆழித்தேரின் சுழலும் சக்கரமாய் தோழி //05
அன்பை வழிந்து சுமக்கும் அத்தை //06
எதிரில் பூக்கும் இன்னொரு தாய் /07
வரங்களைப் பேணிப் போற்றும் வான்முகில் //08
இன்னும் எத்தனையோ சந்தங்கள் பேசலாம்//09
இவளுக்கு எத்தனையோ முகவரிகள் சூடலாம்.//10
விசித்திரம் நிறைந்த சரித்திரம் அவள்//11
பிறருக்காக தன்னையே தொலைத்த தரித்திரமவள்...!//12
கவிஞர் யாழிசைசெல்வா
04/03/2025
No comments:
Post a Comment