நெஞ்சின் மாமழை நீயே
========================
தொட்டும் விட்டும் செல்கிறது தூறல்
விழிப்பட்டதும் அனல் மொட்டாய் மலர்ந்து
இதழ் மொட்டு துடிக்கிறது கண்ணாளா...!
காற்றைத் தூதுவிட்டு கவிதை பேசி
அலைபோல் எழுந்து ஆலிங்கனம் செய்யும்
எனது நெஞ்சின் மாமழை நீயே...!
கவிஞர் யாழிசைசெல்வா
07/03/2025
இதயத்தின் பூக்கள் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை
No comments:
Post a Comment