மறக்குமா நெஞ்சம்
===================
காற்றின் தூதஞ்சலில்
கவிதை செய்தாய்! //01
செல்லச் சினுங்களை
வண்ணக்கிளியிடம் மொழிந்தாய்/02
அங்குமிங்கும் அலையும்
கெண்டை மீனின் விழிகளில்
கொஞ்சிப் பேசி கோலமிட்டாய்!//03
இன்னும் பிறக்காத
பிறந்த நாளிற்காய்
தினமும் பூத்திருக்கிறாய்!//04
என்றோ சொன்ன பொய்களுக்கு
வீணை இசைக்கிறாய்//05
நாதத்தின் நரம்புகளை
மொழிபெயர்க்கும் மோகனம் நீ//06
யாரும் அறியாத
மௌனத்தில் நிழலில்
மின்னல் வெட்டாய் கண்ணசைத்து
இதயத்தில் சூடிக்கொண்ட காரிகை நீ//07
வரையப்படாத ஓவியத்தின்
தூரிகை கொண்டு
எழுதப்படாத காவியத்தின்
மொழிகளைப் பேசும்
என் தேசத்தின் இதய ராணியை
மறக்குமா நெஞ்சம்.....!//08
கவிஞர் யாழிசைசெல்வா
08/03/2025
ஆனந்த அருவி கவிதை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை
No comments:
Post a Comment