Saturday, 8 March 2025

மறக்குமா நெஞ்சம் யாழிசை செல்வா

 மறக்குமா நெஞ்சம் 

===================

காற்றின் தூதஞ்சலில்

கவிதை செய்தாய்! //01

செல்லச் சினுங்களை 

வண்ணக்கிளியிடம் மொழிந்தாய்/02

அங்குமிங்கும் அலையும் 

கெண்டை மீனின் விழிகளில்

கொஞ்சிப் பேசி கோலமிட்டாய்!//03

இன்னும் பிறக்காத 

பிறந்த நாளிற்காய்

தினமும் பூத்திருக்கிறாய்!//04

என்றோ சொன்ன பொய்களுக்கு 

வீணை இசைக்கிறாய்//05

நாதத்தின் நரம்புகளை 

மொழிபெயர்க்கும் மோகனம் நீ//06

யாரும் அறியாத 

மௌனத்தில்  நிழலில்

மின்னல் வெட்டாய் கண்ணசைத்து 

இதயத்தில் சூடிக்கொண்ட காரிகை நீ//07

வரையப்படாத ஓவியத்தின் 

தூரிகை கொண்டு

எழுதப்படாத காவியத்தின் 

மொழிகளைப் பேசும்

என் தேசத்தின் இதய ராணியை 

மறக்குமா நெஞ்சம்.....!//08

கவிஞர் யாழிசைசெல்வா 

08/03/2025


ஆனந்த அருவி கவிதை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை



No comments:

Post a Comment