மீட்டாத வீணையொன்று
========================
கனவுகளை கடத்திச்
சென்று கலி நடனம் புரிகிறாய் //
இன்னும் பேசாத மொழிகளை
இதயத்தில் எழுதிச் செல்கிறாய்//
கற்றைக் குழலின்
நீளம் அறிய
காற்றிடம் தூது அனுப்பினாய்///
அந்தி வானின்
ஆர்ப்பரிக்கும் அழகை மறைக்கும்
வானவில் நீ என்றாய்//
இன்னும் எழுதாத ஓவியத்தின்
ஏடு அறியாத காவியத்தில் முகிழ்ந்த
இதழ் பிரிக்காத மோகப் புதையல் //
உன் விழிக் கனவின்
ராகங்களைத் தேடும்
மீட்டாத வீணையொன்று பூத்திருக்கிறது
உன் வரவிற்காக......!//
கவிஞர் யாழிசைசெல்வா
08/03/2025
கவிதைச் சாரணம் வண்ணக் கொடியும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை இது
No comments:
Post a Comment