Saturday, 8 March 2025

மீட்டாத வீணையொன்று யாழிசை. செல்வா

மீட்டாத வீணையொன்று

========================

கனவுகளை கடத்திச் 

சென்று கலி நடனம் புரிகிறாய் //

இன்னும் பேசாத மொழிகளை 

இதயத்தில் எழுதிச் செல்கிறாய்//

கற்றைக் குழலின்

நீளம் அறிய  

காற்றிடம் தூது அனுப்பினாய்///

அந்தி வானின் 

ஆர்ப்பரிக்கும் அழகை மறைக்கும் 

வானவில் நீ என்றாய்//

இன்னும் எழுதாத ஓவியத்தின் 

ஏடு அறியாத காவியத்தில் முகிழ்ந்த

இதழ் பிரிக்காத மோகப் புதையல் //

உன் விழிக் கனவின் 

ராகங்களைத் தேடும் 

மீட்டாத வீணையொன்று பூத்திருக்கிறது

உன் வரவிற்காக......!//

கவிஞர் யாழிசைசெல்வா 

08/03/2025


கவிதைச் சாரணம் வண்ணக் கொடியும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை இது


No comments:

Post a Comment