மல்லிகை பூ பூத்தது போல்
==========================
மனசெல்லாம் பூத்திருக்க...
===========================
சின்ன இடைவெட்டி //01
சிங்கார நடை நடந்து //02
ஒய்யாரக் கொண்டையில //03
ஒத்த மல்லிகைச் சரம் வச்சிக்கிட்டு //04
கத்தாழ கண்ணால குத்தாம கொல்லுறியே....!//05
கத்தரிப் பூவழகா கனகாம்பர தோள் அழகா //06
எனச் சொல்லாம சொல்லிக்கிட்டு//07
நிக்காம சிக்காம நெடுந்தூரம் போறவளே....!//08
ஆற்றங்கரையோரம் நெல்லி மரம் பூத்திருக்க //09
கண்டாங்கி சேலைகட்டி காத்துல தூது விட்டவளே...!//10
மல்லிகைப்பூ பூத்தது போல் //11
மனசெல்லாம் பூத்திருக்கு//12
கவிஞர் யாழிசைசெல்வா
05/03/2025
No comments:
Post a Comment