Tuesday, 4 March 2025

படிக்கும் கண்களும் துடிக்கும் இமைகளும் - யாழிசை செல்வா

காலம் கிழித்த  கோடு கரைகிறது //01

வாசல் தாண்டி நீளும் பயிற்சி //02

வளை கரம் எழுதும் முயற்சி// 03

இன்னும் எத்தனையோ இடர்கள் தகர்ந்தன //04

இதுவரை பூட்டி வைத்தவை எழுகின்றன //05

கட்டிய கோபுரம் கலகலத்துப் போனது //06

காகிதத்தில் கிறுக்கியதை காற்றும்கூட பேசுகிறது //07

வாசனை மொழிகள் புலக்கடைக்கு போனது //08

புதிய வானம் நீண்ட தொடக்கம் //09

இதழ்கள் இசைக்கும் இன்னிசை முழக்கம் //10

அலைந்து ஆர்ப்பரித்தவை 

சிதைந்து சிறுத்தது //11

பாருக்கும்  பயிற்றுவிக்கும் புதிய தொடக்கம் //12

விடியலை தொடங்கி வைக்கும் கானத்தை //13

படிக்கும் கண்களும் துடிக்கும் இமைகளும் //14

தோள்களில் தாங்கிக் கொண்டு தாலாட்டியது//15

ஆதியில் தொட்டது அமர்களமாய் தொடர்கிறது//16


கவிஞர் யாழிசைசெல்வா 

திருப்பூர் 

04/03/2025


No comments:

Post a Comment