காதல் விழிப்பார்வையிலே
===========================
சித்திரை திருவிழாவில்
முத்திரை பதிக்கும்//01
சித்தினி சிரிப்பில்
சில்வண்டு ரீங்காரம்//02
வெடுக்கென சுண்டும்
சுந்தர இடையில்//03
செவ்வண்ண பட்டுத்
தாவணி உடுத்தி//04
மான் தோற்கும்
துள்ளல் நடையில்//05
தேன் தடவிய
இதழ் பேசும்//06
மோகன ராகம்
மூச்சு முட்ட//07
சந்தன சிலையின்
சதங்கை ஒலிக்க//08
இன்பம் பெருக்கும்
இன்னிசை முழங்க//09
காதல் விழிப்
பார்வையில் கவிதையானாள்!//10
கவிஞர் யாழிசைசெல்வா
07/03/2025
ரோசா கூட்டம் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை
No comments:
Post a Comment